Saturday, January 29, 2011

! இதயம் கொண்ட இறைவா..!

காதல் மொழி 
அவள் 
கண்கள் பேச ..!
நான் 
கண் மூடி 
கூந்தலலையில் 
மூழ்கிய தருணங்கள்.

நான் 
வைத்த முத்தங்கள் அவள்..
கன்னங்கள் நனைக்க..
அவள் 
விழியால் சுட்டு .
என் 
இதயம் உடைத்து ..
அள்ளிய நிமிடங்கள்.
அவள் 
பேசி சிரித்து ..
அனைத்து தழுவிய 
நேரங்கள்.

அவள்  
கண்மை 
கரைத்து வந்த ..
கருப்பு கண்ணீர்..
கையில் ஒட்டி...
உயிர் புகுந்து ..
வெடித்து ,,
இதயம் கொன்று ..
சென்ற தருணம்..

யாவும் 
கூடி ..
மீண்டு வந்த என்னை ..
மீண்டும் மீண்டும் கொல்கின்றன..
இதயம் இல்லாது ..

இறைவா ..!
சிதறிய இதயம் ஒட்ட..
வலி தீர .
ஒரு வழி வேண்டும் ..
இறைவா..!
இதயம் கொண்ட இறைவா..!

Tuesday, January 25, 2011

!லைட் போட்ட புண்ணியவான்....!

களைத்து வந்து...
 கண்கள் மூடி..
கனவில் விழுந்தேன்..
"காதல்" சுவைக்க.

அவள் பார்வை அம்புகள்..
இதயம் கிள்ள..
பார்த்து சிரித்தேன்..
பதில் சிரிப்பு..
சிரிப்பில் தவறி விழுந்தேன்..
மீண்டு வர..
மீண்டும் சிரிப்பு..
விரும்பி விழுந்தேன்..
திரும்பும் எண்ணமில்லை...

பாடினாள்.."குயில்" என்றேன்..
"கதை" என்றாள்...
"கவிதை" என்றேன்..
சிரித்து கண்ணிமைத்தாள் 
பேச்சற்று ..பார்த்தேன்..
 நின்றேன்..!

புருவங்கள் நடனம் ஆட..
பேசினாள்..
மயங்கினேன்..

திடீர் வெளிச்சம் ..
தூக்கம் கெடுக்க..
விழித்தெழுந்தேன்..
கலைந்தது  கனவு ..
இதயமும் கூட...

லைட் போட்ட புண்ணியவான்...
வாழ்க..!
வாழ்க..!

Friday, December 31, 2010

! கல்லறைக்கு பூ வைத்தேன்.. !

காதல் காமம் ..
கலவை கலந்து ...
கற்று 
கிடந்து சிரிக்க..
கலை ரசித்து..
கன்னம் உரச..
கண் மூடி தழுவி..
கட்டி அணைக்க 
கண் மூடி 
காற்றில் தேடுகிறேன் ..
உன்னை..

விரல்கள் சொடுக்கெடுத்து...
வருடி தழுவ..
சொல்வதை செய்து..
சொல்லாததையும் செய்து..
தொடாமல் தொட்டு..
தேட ஆசை பற்ற..
கண் மூடி 
காற்றில் தேடுகிறேன் ..
உன்னை..

கண்களால் 
கடத்தி..
இதயத்தில் சிறை கொண்டு..
நூறு முத்தம் தர..
ஆசை ஆயிரம் 
உள்ளத்தில் வந்து குவிய..
அள்ளியெடுக்க யாருமின்றி..
கண் மூடி 
காற்றில் தேடுகிறேன் ..
உன்னை..

தேடி அலைந்து..
திக்கற்று நின்று..
மூளை கலங்கி..
தெளிவு பெற்று ..
உண்மை விளங்க..
புத்தாண்டு உனக்கு 
புத்துயிர் தர வேண்டி..
கண்ணீரைக் காணிக்கை செய்தேன் ..
உந்தன் 
கல்லறைக்கு பூ வைத்தேன்..

Sunday, December 19, 2010

காதல்..காதல்

காதல்
காதல்..!
கண்ணீர் தீர்ந்தது  அழுது..
இரவின் நீளம் நீண்டு..
தூங்காது விழித்து..
கண்கள் வீங்கி..
சிவந்து..
கண்ணீரில் காதலைக் கரைக்க...
முயல...
தரையில் விழுந்த  துளிகளில்
சிரித்தாள் அவள்..!
சேர்த்த சுகம் முழுதும்
புகைவிட்டு போக்க
முனைந்து..
இரவில் வானம் பார்க்க..
நிலவில் சிரித்தாள்..!
கை விட்டு தானே
தாவிக் குதித்தது சிகரட் ..
கண்ணீர் முட்டி நின்றேன்
அவள் சிரிப்பைக் கண்டு..

பின்னிரவுக் கனவில்..
சேர்த்த  நினைவுகள்...
வந்து குவிய...
கனவெலாம் வந்தாள்..

வந்தவள்  முத்தம்..
நெற்றியில் தர..
கன்னத்தில் வேண்டுமென்றேன்..
சிரிப்பால் மழுப்பி..
முகம் சிவக்க நின்றாள்..
நெற்றிக்குங்குமமும் சேர்ந்து சிவந்திருந்தது ..
"தினமும் வருக"
என்று கோரிக்கை வைக்க..
"கன்னத்தில் முத்தமிட்டாள்"..
என் முகம் சிவந்தது..
காதல் பொங்கி ..
திகட்டி  நிற்க..
கண்கள் சிமிட்டினாள்...
விழித்தேன்..
திகட்டிய காதல் தேடினேன்..
வெறுமை
மிச்சம்..
கண்களில் கண்ணீர் சொரிய...
காதல்..
காதல்..!

Saturday, December 11, 2010

! என் ஆசை !

கண்கள் கைகளால் பேசி 
கோபப்பட்டு...
செல்லமாய் திட்டி ...
கன்னம் கிள்ளி..
உரசி..
தலை கோதி..
பின்னிருந்து அனைத்து..
கழுத்தில் முத்தமிட்டு..
காதல் பேசி..
கொஞ்சி..
காபி தந்து ..
முத்தமிட்டு..ஊக்குவித்து..
தோள் சாய்ந்து..இளைப்பாறி..
இன்பம் தந்து..
சேர்ந்து.. சிரித்து..
கதை பேசி..
கற்று...
சேர்ந்து கவி எழுதி ..
தாள்கள் கசக்கி 
குப்பை தொட்டி நிரப்பி ..
தலையணை சண்டையிட்டு ..
கட்டியணைத்து...
சமாதானம் செய்து..
வெற்றி பெற்று 
இதயம் திருடி...
வாழ்க்கை ரசிக்க..
ஆசை..
கனவில் நீ இருந்தும்...
 நிஜத்தில்
தேடுகிறேன்..
"உன்னை.." 
யாரென்று தெரியாமல்...
காணா 
கனாக் 
காதலியே ...
"உன்னை.."!

Wednesday, December 1, 2010

!நாய்கள்..நாய்கள்..!

!நாய்கள்.. நாய்கள்..!
எங்கள் பெண்கள் 
பினமானாலும் 
விடாது துரத்தி 
தேடும்..!
பிணம் தின்னி நாய்கள்..!
நாய்கள்.. நாய்கள்..!

கண்கள் கைகள் 
கட்டி..
கத்தியால் குத்தி..
கீறி எட்டி உதைத்து..!
பின்னிருந்து..சுட்டு..!
வீரம் காட்டி..
வெறி தீர்க்கும் நாய்கள்..!
நாய்கள் நாய்கள்..!

சிதறிய மண்டைகள்..
எலும்புகள்..நொறுங்கிக் கிடக்க..!
ரத்தக் குளத்தில்..!நின்று..
குரைத்து கொண்டாடும்..நாய்கள்..!
நாய்கள்..! நாய்கள்..!

ரத்தங்கள் ஆறாய் ஓட..
வெற்றியென குரைத்து 
 கீதம் 
பாடும் நாய்கள்..!
நாய்கள்..நாய்கள்..!

செத்து விழுந்தவரை 
இழுத்துப் போட்டு  புதைத்து..
புதைத்து..!
ரத்தங்கள் ஊற்றி 
ஊற்றி..!
சாத்தான்கள் ஓலமிட்டு..
அமைதியாய் இருக்கும்..!
நாய்கள்..
நாய்கள்..!

Tuesday, November 16, 2010

!அவன் கதை!

மூட்டி தேய்ந்து !
தட்டி விழுந்து !
தூக்கம் தொலைத்து..!
கனவில் வெற்றி பெற்று ..!
நிஜத்தில் தோல்வியுற்று..
கதறி அழுது..!
கண்ணீரில் மூழ்கி மிதந்தான்..!


எட்டியவன் ஏளனம் துளைக்க ..!
மனதெலாம்..!
ரத்தம்..!
ரத்தம்..!
காய்ந்த ரத்தம் பெயர்ந்து தொங்க ..!
அடி..!
அடி..!
தோல்வி துளைத்தெடுக்க.. 
நாளை இன்றி வாழ்கை ..!

வீங்கிய கண்களில் தெரிந்தாள்..அவள்..!
ஒளி பெற்றான்..!
உள்ளிருந்து ஒருவன் குரல்
"தேவதை வருவாள் ஒரு நாள்..மயிலிறகோடு..!
மருந்திடுவாள்..!"

மீண்டும் வருவான்..!
முட்டி தேய..
தட்டி விழ..
வெற்றி பெற..!
ஏளனம் தகர்க்க!



கண்விழித்தேன் ..!
எதிரே பீனிக்ஸ்..!