Saturday, January 29, 2011

! இதயம் கொண்ட இறைவா..!

காதல் மொழி 
அவள் 
கண்கள் பேச ..!
நான் 
கண் மூடி 
கூந்தலலையில் 
மூழ்கிய தருணங்கள்.

நான் 
வைத்த முத்தங்கள் அவள்..
கன்னங்கள் நனைக்க..
அவள் 
விழியால் சுட்டு .
என் 
இதயம் உடைத்து ..
அள்ளிய நிமிடங்கள்.
அவள் 
பேசி சிரித்து ..
அனைத்து தழுவிய 
நேரங்கள்.

அவள்  
கண்மை 
கரைத்து வந்த ..
கருப்பு கண்ணீர்..
கையில் ஒட்டி...
உயிர் புகுந்து ..
வெடித்து ,,
இதயம் கொன்று ..
சென்ற தருணம்..

யாவும் 
கூடி ..
மீண்டு வந்த என்னை ..
மீண்டும் மீண்டும் கொல்கின்றன..
இதயம் இல்லாது ..

இறைவா ..!
சிதறிய இதயம் ஒட்ட..
வலி தீர .
ஒரு வழி வேண்டும் ..
இறைவா..!
இதயம் கொண்ட இறைவா..!

Tuesday, January 25, 2011

!லைட் போட்ட புண்ணியவான்....!

களைத்து வந்து...
 கண்கள் மூடி..
கனவில் விழுந்தேன்..
"காதல்" சுவைக்க.

அவள் பார்வை அம்புகள்..
இதயம் கிள்ள..
பார்த்து சிரித்தேன்..
பதில் சிரிப்பு..
சிரிப்பில் தவறி விழுந்தேன்..
மீண்டு வர..
மீண்டும் சிரிப்பு..
விரும்பி விழுந்தேன்..
திரும்பும் எண்ணமில்லை...

பாடினாள்.."குயில்" என்றேன்..
"கதை" என்றாள்...
"கவிதை" என்றேன்..
சிரித்து கண்ணிமைத்தாள் 
பேச்சற்று ..பார்த்தேன்..
 நின்றேன்..!

புருவங்கள் நடனம் ஆட..
பேசினாள்..
மயங்கினேன்..

திடீர் வெளிச்சம் ..
தூக்கம் கெடுக்க..
விழித்தெழுந்தேன்..
கலைந்தது  கனவு ..
இதயமும் கூட...

லைட் போட்ட புண்ணியவான்...
வாழ்க..!
வாழ்க..!