Friday, March 26, 2010

பைத்தியத்தின் கடிதம்

ன்பே ..!
சையில் உன்னை அணைத்தது ..
தழில் இதழ் புதைத்தது ..
ரக்கூந்தலில் நீ முகத்தி அறைந்தது..
ன் சிரிப்பில் எனைத் தொலைத்தது...
தி நான் அணைத்த விளக்கு கண்டு..வெட்கத்தை அள்ளி நீ பூசியது..

ட்டா உயரத்தையும் எட்டிபிடிக்க நீ உதவியது .
எல்லாம் என் மனதில் உண்டு என்னுயிரே அழியாது இன்றுவரை..

ற்றிவிட்ட..ஏணியே எங்கே நீ?
ரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றுவிட்டாய் மீளாத்துயில்கொள்ள..
யாது வேண்டுகிறேன்
வையை போல் ஐயன் முருகனிடம் ..
நீ மீண்டும் வர வேண்டும் என்று..
மக்களிடம் பைத்திய பட்டம் பெற்று ..

இப்படிக்கு,
பைத்தியம் (மக்களை பொறுத்தவரை) எனப்படும் உன் காதலன்

Thursday, March 4, 2010

!அவனை வீழ்த்த வந்தவள் கதை !

அந்தி மயங்க மயங்க...
ஆர்ப்பரிக்கிரதவனுள்ளம்..அலைகடலாய் ..
அவள் வரவை எண்ணி.. எண்ணி....
அவனுக்கு அம்மா அவள் பின்னிக் கொடுத்த..
சால்வையைப் போர்த்தியபடி..
வானம் கரு நிற போர்வை அணிவதை ..
பார்த்தபடி காத்திருக்கிறான்..
அவள் வரவு வேண்டி ஆவலோடு..

வருபவள் தனியாக வராது மங்கை ஒருவளையும் கூட்டி வருவாள் ..
அவனுக்காக ..அனுதினமும்..
நடக்கிறது இக்கூத்து தொலைகாட்சி தொடர்கதையாய்...நில்லாமல்..

ஐயோ ..!
வந்துவிட்டாள் அவள் ..
அவனைக் கட்டிலில் வீழ்த்த..
.............
"என்ன இவன் மஞ்சள் கவிஞனா?"
நீங்கள் கேட்பது என் செவியில் விழுகிறது..

அவனைக் கட்டிலில் வீழ்த்த வந்தவள் பெயர் "தூக்கம் "
அவள் கூட்டி வந்த மங்கை அவளது பெயர் "கனவு"