அன்பே ..!
ஆசையில் உன்னை அணைத்தது ..
இதழில் இதழ் புதைத்தது ..
ஈரக்கூந்தலில் நீ முகத்தி அறைந்தது..
உன் சிரிப்பில் எனைத் தொலைத்தது...
ஊதி நான் அணைத்த விளக்கு கண்டு..வெட்கத்தை அள்ளி நீ பூசியது..
எட்டா உயரத்தையும் எட்டிபிடிக்க நீ உதவியது .
எல்லாம் என் மனதில் உண்டு என்னுயிரே அழியாது இன்றுவரை..
ஏற்றிவிட்ட..ஏணியே எங்கே நீ?
ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றுவிட்டாய் மீளாத்துயில்கொள்ள..
ஓயாது வேண்டுகிறேன்
ஔவையை போல் ஐயன் முருகனிடம் ..
நீ மீண்டும் வர வேண்டும் என்று..
மக்களிடம் பைத்திய பட்டம் பெற்று ..
இப்படிக்கு,
பைத்தியம் (மக்களை பொறுத்தவரை) எனப்படும் உன் காதலன்
இது என் பக்கங்கள்... நான் கிறுக்கிய பக்கங்கள், நான் ரசித்த பக்கங்கள்...படித்து மறவாது தங்கள் எண்ணங்களையும் பதிவு செய்திடுங்கள்...நண்பர்களே!! இப்படிக்கு, நான் தமிழன்.
Friday, March 26, 2010
Thursday, March 4, 2010
!அவனை வீழ்த்த வந்தவள் கதை !
அந்தி மயங்க மயங்க...
ஆர்ப்பரிக்கிரதவனுள்ளம்..அலைகடலாய் ..
அவள் வரவை எண்ணி.. எண்ணி....
அவனுக்கு அம்மா அவள் பின்னிக் கொடுத்த..
சால்வையைப் போர்த்தியபடி..
வானம் கரு நிற போர்வை அணிவதை ..
பார்த்தபடி காத்திருக்கிறான்..
அவள் வரவு வேண்டி ஆவலோடு..
வருபவள் தனியாக வராது மங்கை ஒருவளையும் கூட்டி வருவாள் ..
அவனுக்காக ..அனுதினமும்..
நடக்கிறது இக்கூத்து தொலைகாட்சி தொடர்கதையாய்...நில்லாமல்..
ஐயோ ..!
வந்துவிட்டாள் அவள் ..
அவனைக் கட்டிலில் வீழ்த்த..
.............
"என்ன இவன் மஞ்சள் கவிஞனா?"
நீங்கள் கேட்பது என் செவியில் விழுகிறது..
அவனைக் கட்டிலில் வீழ்த்த வந்தவள் பெயர் "தூக்கம் "
அவள் கூட்டி வந்த மங்கை அவளது பெயர் "கனவு"
ஆர்ப்பரிக்கிரதவனுள்ளம்..அலைகடலாய் ..
அவள் வரவை எண்ணி.. எண்ணி....
அவனுக்கு அம்மா அவள் பின்னிக் கொடுத்த..
சால்வையைப் போர்த்தியபடி..
வானம் கரு நிற போர்வை அணிவதை ..
பார்த்தபடி காத்திருக்கிறான்..
அவள் வரவு வேண்டி ஆவலோடு..
வருபவள் தனியாக வராது மங்கை ஒருவளையும் கூட்டி வருவாள் ..
அவனுக்காக ..அனுதினமும்..
நடக்கிறது இக்கூத்து தொலைகாட்சி தொடர்கதையாய்...நில்லாமல்..
ஐயோ ..!
வந்துவிட்டாள் அவள் ..
அவனைக் கட்டிலில் வீழ்த்த..
.............
"என்ன இவன் மஞ்சள் கவிஞனா?"
நீங்கள் கேட்பது என் செவியில் விழுகிறது..
அவனைக் கட்டிலில் வீழ்த்த வந்தவள் பெயர் "தூக்கம் "
அவள் கூட்டி வந்த மங்கை அவளது பெயர் "கனவு"
Subscribe to:
Posts (Atom)