ஹாய் ! வணக்கங்கள் ...நண்பர்களே..
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!நிறைய பேர்( ரெண்டு பேர்தான் ... :) ) கேட்டாங்க ,"என்ன தமிழன் உங்க தமிழில் கொஞ்சம் வித்தியாசம் தெரியுதே?".. என்று..நான் அவர்கள் எல்லார்க்கும் சுருக்கமா பதில் சொல்லிறேன்..
"சுத்த தமிழ் ,மரபுக் கவிதை (அதுவும் நான் எழுதனது வேற...) கொஞ்சம் போர் அடிக்ற மாதிரி.... எனக்கு தோன்றியது..சோ! கொஞ்சம் ட்ராக் மாறுவோமே ..அப்டின்னு எழுத ஆரம்பிச்ருக்கேன்.ஹ்ம்ம்!..இப்போவாவது வாசகர்கள் கமெண்ட் கொடுக்ராங்க்லானு பாப்போம் ..!!!(யோ !முதல வாசகர்கள் கூடுராங்கலானு பாரு அப்டின்னு நீங்க சொல்றது கேக்குது..கேக்குது ).." சோ ..இந்த மாற்றத்தில் சுயநலம் கலந்திருக்கு..பட் அந்த சுயநலத்திலையும் பொதுநலம் கலந்திருக்கிறதுபா (நன்றி விவேக் சார்... ). ஐயோ... சுருக்கமா பதில் சொல்றேன்னு ரொம்ப பேசிட்டு இருக்கேன் என்று நினைக்கிறேன் ..இதோடு ஆசிரியர் பக்கத்தை முடிச்சுக்றேன் ..
கவர் ஸ்டோரிக்கு போவோமா..?..
எதை பற்றி எழுதுவது என்று யோசிச்சுற்றுகும்பொது..என் நண்பர் சொன்னார் அரசியல் பற்றி எழுதவே மாட்டேன்கறீங்க என்று (நம்மள்ட்ட இருந்து ரொம்ப எதிர் பாக்ராங்களோ?) சோ கொஞ்சம் அரசியல் பேசுவோமே..
முதல நம்ம தலைவர்கள் பற்றி ..
86 வயதான ஒரு மாநிலத்தின் ஆளுநர், ..ஆளுநர் மாளிகையிலேயே பெண்களுடன் _______ _________ _________ (கோடிட்ட இடத்தை நிரப்புக )
இன்னொரு பக்கம் ஈழ போரை நிறுத்த சொல்லி காலை சிற்றுண்டி ..மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில்ல்ல்ல்....கடற்கரையில் ஒருவர் உண்ணா நோன்பு ??(பின் குறிப்பு: குளிர்
சாதன பெட்டியுடன் )
இவுங்கதான் தலைவருங்கலாம்பா ....
அரசியல் பேசும்போது தமிழன்...இந்தியன்..பேசாம இருக்க முடியுமா..?
தெலுங்கானா..(இந்தியன் )
ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார் ...
மாநிலத்தை பிரிக்க ஆணையிடுகிறது..மத்தியரசு
தமிழ்நாடு ..(இந்தியன் எனப்படுகிற தமிழன் )
ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற காரனத்திற்காக 18மாவீரர்கள் நெருப்பிற்கு தங்கள் உயிர்களை இரையாக்குகிறார்கள் ...
மத்தியரசு ஒரு வருத்தமோ ..ஒரு கண்டனமோ ..செய்ததாக இதுவரைக்கும் தகவல் இல்லை..
இதுவரை சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்தியன் என்று சொல்லப்படுகின்ற தமிழனின் எண்ணிக்கை 500 தொடுகிறது..
இதற்கு மத்தியரசு செய்தது..உருப்படியாக ஒன்றுமில்லை..அதுவே ஏதேனும் ஒரு மலையாளிக்கு வளைகுடாவில் பிரச்சனையா..?
எத்தனை கண்டனங்கள்.? சரப்ஜித் சிங் தூக்கு தண்டனை குறைக்க சொல்லி எத்தனை வேண்டுகோள்கள்.. தமிழர் உயிர்களில் என்ன வித்தியாசம் கண்டிருக்கின்றனரோ? ஒரு கண்டனம் கிடையாது..தமிழர் குருதியில் ஆராய்ச்சி செய்ய என்னுகிர்ரர்கள்..பதர்கள்..!
ஏன் இந்த வஞ்சனை செய்யப்படுகிறது?..ஏன் இந்த வேற்றுமை காட்டப்படுகிறது ?..
பதில் கட்டாயம் காலம் தான் சொல்ல வேண்டும் .
பதில் என்பது கேள்வி கேட்டால் தானே தரப்படும் ..அத்தகைய கேள்விகளை கேட்கும் அளவிற்கு நம் அரசியல் தலைவர்கள் இல்லை..
தங்கள் மகனை எவ்வாறு மந்திரி ஆக்குவது..என்பதை சிந்திப்பதிலேயே பாதி பேர் தங்கள் சிந்தனையை செலுத்துகிறார்கள்...அவர்களுக்கு எப்படி கேள்விகள் கேட்பதற்கு நேரம் இருக்கும் .இன்னும் சில பேர் இருக்கிறார்கள் எந்த தொந்தரவும் வேண்டாம் என்று எஸ்டேட்டுக்கு சென்று விடுவார்கள்..
சாதிய அரசியலை விடுத்து ..
கட்சி வேறுபாடுகள் மறந்து நம் இனத்திற்கு ஒரு நல்ல தலைமை..
கேள்விகளை கேட்பதற்கு தேவை..
அத்தலைமை வரும் நாள் தமிழர்க்கு திருநாளாகும்..
அடுத்து இடைத்தேர்தல்
இவ்வார்த்தைக்கு தான் எவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறது அநியாயம்,அராஜகம்,கொண்டாட்டம்(வாக்காளர்களுக்குதான்..).
இப்போதெல்லாம் யார் என்ன செய்தார்கள் .யார் நல்லவர்... யார் கேட்டவர் ...என்று வாக்காளர்கள் பார்ப்பதில்லை..யார் அதிகம் கொடுக்கிறார்கள் என்றே பார்க்கின்றனர் ..ஒரு மாத சம்பளத்தை ஒரு ஓட்டிற்கு தந்தால் யார் வேண்டாமென்பார்கள்..முன்பெல்லாம் இலை மறைவு..காய் மறைவாக நடந்தது இப்பொழுது..வெளிப்படையாகவே நடக்கிறது..இதை தேர்தல் ஆணையம்(அப்டினா என்ன ?) வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது வேதனையே..
சரி விடுங்க பாஸ் ...அரசியல் போதும் அ
றிவியலுக்குள் போவோமே ...
உலகத்திலேயே ரொம்ப ஸ்ட்ராங்கான பொருள் என்ன ? இப்படி ஒரு கேள்வி வந்தா எல்லாரும் பட்டுன்னு பதில் சொல்வீங்க "வைரம் "(கல்யாணம் முடிஞ்ச சில பேர் "தோச கரண்டி"ன்னு கூட சொல்லலாம் பாவம்..அவங்க வலி எனக்கு புரியுது ..)என்று..இனிமேல் அப்படி சொல்ல முடியாதுங்க ஏனா..அதைவிட ஸ்ட்ராங்கான ஒரு பொருளா கண்டுபுடிச்சிட்டாயங்க..அதோட பேரு.. "லான்ஸ்டாலைட்" சோ இனி "
லான்ஸ்டாலைட்" என்றே பதில் சொல்லுங்க..மச்சிஸ்..
அடுத்த தகவல்..விண்வெளில உருவாகிக்கொண்டிருக்கிற ஆய்வுக்கூடத்துக்கு புதுசா இப்பொழுது மூணு பேர் போயிருக்றாங்க ..ஏற்கனவே அங்க மூணு மாசம் தங்கிருக்றவங்க..இப்ப ஏக குஷில இருக்கங்க்லாம்பா புது கம்பெனி கிடைக்க போகுதுல அவங்களுக்கு. சோ..மொத்தம் அங்க ஐந்து பேர் இருக்றாங்க இப்ப..
(இவ்ளோதான்யா உலகம்..!)
கொசுறு தகவல் எதோ செவ்வாய் கிரகத்துக்கு டூர் வேற கூட்டிட்டு போகபோரான்கலாம் மொத்தம் ஐந்நூறு நாட்களாம் காசிருக்ரவங்க ரெடி ஆகிக்கோங்கோ.... !
புரியுது...
உங்க நிலைமை எனக்கு புரியுது..
இதுக்கு மேல மொக்கை போட முடியாதுன்னு நினைக்கிறேன்..சோ
இப்ப நிறுத்திக்றேன்..நெக்ஸ்ட் மீட் பண்றேன்..
நான்தமிழன்.(எழுதினது பிடித்ததென்றால் கமெண்டுங்க...பிடிக்க வில்லை என்றாலும் கமெண்டுங்க...
அடுத்த வருஷம் மீட் பண்ணுவோம் ...நன்றி !)