Wednesday, December 30, 2009

!எங்கோ படித்தது !

இந்தியன்: நீ ஒரு இந்தியன்…
தமிழன்: ஆம் நான் இந்தியன்…
இந்தியன் : உனக்கு சுதந்திரம் உண்டு அனால் பேச்சு சுதந்திரம் இல்லை…
தமிழன்: அதனால் என்ன சுதந்திரம் இருக்கிறதே…

இந்தியன் : நீ ஒரு இந்தியன்…
தமிழன்: ஆம் நான் இந்தியன்…
இந்தியன் : தமிழில் பேசலாம்.. கேள்வி கேட்ககூடாது….”
தமிழன்: சரி…..

இந்தியன் : நதி உனக்கு, நீர்மட்டும் அவர்களுக்கு…”
தமிழன் : பின் எப்படி நான் பயிர்செய்வது…
இந்தியன் : உன் நல்ல மனதிற்கு கடவுள் மழை தருவார்…
இனி கேள்வி கேட்க்ககூடாது…”
தமிழன் : ஓ… மறந்துபோனேன்..இனி கேட்கமாட்டேன்..

தமிழன் : ஐயோ என் சொந்தங்களை அடிக்கிறார்களாம்
அண்டை மாநிலத்திலே…
இந்தியன் :அடிப்பவனும் உன் சகோதரன் தான்…
தமிழன் : யார் சொன்னது…
இந்தியன் :நீதான் சொன்னாய் இந்தியர்கள் உன் சகோதரர்கள் என்று…
தமிழன் : ஓ…அப்படியானால் சரி…

இந்தியன் : தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள்….!
தமிழன்: எங்கே?
இந்தியன் : காஷ்மிரிலே…
நம் மண்ணை கேட்கிரார்கள் மாபாவிகள்..
தரலாமா ஒரு பிடிமண்ணும் மாற்றானுக்கு…
தமிழன் : பின் எதற்கு கொடுத்தீர்கள் கச்சதீவை?
இந்தியன் : ம்ம்… ம்… வாயை மூடடா”…

தமிழன் : மலேசியாவில் அடிக்கிரார்களாம் இந்தியனை…
இலங்கை கடற்படை சுடுகிறது இந்தியனை…
இந்தியன் : யார் சொன்னது அவர்கள் இந்தியனென்று….??
தமிழன் தானே…? ஸூத்திரன்”….

இந்தியன் : சரி சரி வரி கொடு…
தமிழன்: எதற்கு…!!?
இந்தியன் : நீ இந்தியன்..
தமிழன்: யார் சொன்னது..?
இந்தியன் : நான்தான் சொல்லுகிரேன், நீ இந்தியன்”..

இந்தியன் : என்னடா முறைக்கிறாய்…?”
தமிழன்: சிங்களவனுக்கு ஆயுதம் கொடுத்தாயா..?
இந்தியன் :ஆம் அதற்கென்ன..?
தமிழன் : அவர்கள் என் சொந்தம்…நீ கொடுத்தது என் பணம்..
இந்தியன் : அவர்கள் நம் தலைவனை கொன்றவர்கள்…
தமிழன் : யாரடா தலைவன்? என் தலைவன் பிரபாகரன்…

இந்தியன் : ராஜதந்திரியாரே… இவன் பிரபாகரன் என்றான்..!!!!
ராஜதந்திரி :ஆ… அவன் விழித்துக்கொண்டான்…
அவனை இருட்டறையில் அடையுங்கள்…
அவன் கேள்வி எழுப்புவான்…
மற்றவர் காதில் விழாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்…
அவன் தமிழன் எச்சரிக்கை !!!
இந்தியர்களே…. உசார்!”

!!ஜாலி @ சீரியஸ் தமிழன், தலைவர்கள் ,தமிழ்நாடு,இந்தியா தெலுங்கானா ,அறிவியல், தோச கரண்டி ,"லான்ஸ்டாலைட்"..விண்வெளி !!

ஹாய் ! வணக்கங்கள் ...நண்பர்களே..
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!நிறைய பேர்( ரெண்டு பேர்தான் ... :) ) கேட்டாங்க ,"என்ன தமிழன் உங்க தமிழில் கொஞ்சம் வித்தியாசம் தெரியுதே?".. என்று..நான் அவர்கள் எல்லார்க்கும் சுருக்கமா பதில் சொல்லிறேன்..
"சுத்த தமிழ் ,மரபுக் கவிதை (அதுவும் நான் எழுதனது வேற...) கொஞ்சம் போர் அடிக்ற மாதிரி.... எனக்கு தோன்றியது..சோ! கொஞ்சம் ட்ராக் மாறுவோமே ..அப்டின்னு எழுத ஆரம்பிச்ருக்கேன்.ஹ்ம்ம்!..இப்போவாவது வாசகர்கள் கமெண்ட் கொடுக்ராங்க்லானு பாப்போம் ..!!!(யோ !முதல வாசகர்கள் கூடுராங்கலானு பாரு அப்டின்னு நீங்க சொல்றது கேக்குது..கேக்குது ).." சோ ..இந்த மாற்றத்தில் சுயநலம் கலந்திருக்கு..பட் அந்த சுயநலத்திலையும் பொதுநலம் கலந்திருக்கிறதுபா (நன்றி விவேக் சார்... ). ஐயோ... சுருக்கமா பதில் சொல்றேன்னு ரொம்ப பேசிட்டு இருக்கேன் என்று நினைக்கிறேன் ..இதோடு ஆசிரியர் பக்கத்தை முடிச்சுக்றேன் ..
கவர் ஸ்டோரிக்கு போவோமா..?..

எதை பற்றி எழுதுவது என்று யோசிச்சுற்றுகும்பொது..என் நண்பர் சொன்னார் அரசியல் பற்றி எழுதவே மாட்டேன்கறீங்க என்று (நம்மள்ட்ட இருந்து ரொம்ப எதிர் பாக்ராங்களோ?) சோ கொஞ்சம் அரசியல் பேசுவோமே..

முதல நம்ம தலைவர்கள் பற்றி ..

86 வயதான ஒரு மாநிலத்தின் ஆளுநர், ..ஆளுநர் மாளிகையிலேயே பெண்களுடன் _______ _________ _________ (கோடிட்ட இடத்தை நிரப்புக )

இன்னொரு பக்கம் ஈழ போரை நிறுத்த சொல்லி காலை சிற்றுண்டி ..மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில்ல்ல்ல்....கடற்கரையில் ஒருவர் உண்ணா நோன்பு ??(பின் குறிப்பு: குளிர் சாதன பெட்டியுடன் )

இவுங்கதான் தலைவருங்கலாம்பா ....

அரசியல் பேசும்போது தமிழன்...இந்தியன்..பேசாம இருக்க முடியுமா..?

தெலுங்கானா..(இந்தியன் )
ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார் ...
மாநிலத்தை பிரிக்க ஆணையிடுகிறது..மத்தியரசு

தமிழ்நாடு ..(இந்தியன் எனப்படுகிற தமிழன் )
ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற காரனத்திற்காக 18மாவீரர்கள் நெருப்பிற்கு தங்கள் உயிர்களை இரையாக்குகிறார்கள் ...
மத்தியரசு ஒரு வருத்தமோ ..ஒரு கண்டனமோ ..செய்ததாக இதுவரைக்கும் தகவல் இல்லை..

இதுவரை சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்தியன் என்று சொல்லப்படுகின்ற தமிழனின் எண்ணிக்கை 500 தொடுகிறது..
இதற்கு மத்தியரசு செய்தது..உருப்படியாக ஒன்றுமில்லை..அதுவே ஏதேனும் ஒரு மலையாளிக்கு வளைகுடாவில் பிரச்சனையா..?
எத்தனை கண்டனங்கள்.? சரப்ஜித் சிங் தூக்கு தண்டனை குறைக்க சொல்லி எத்தனை வேண்டுகோள்கள்.. தமிழர் உயிர்களில் என்ன வித்தியாசம் கண்டிருக்கின்றனரோ? ஒரு கண்டனம் கிடையாது..தமிழர் குருதியில் ஆராய்ச்சி செய்ய என்னுகிர்ரர்கள்..பதர்கள்..!
ஏன் இந்த வஞ்சனை செய்யப்படுகிறது?..ஏன் இந்த வேற்றுமை காட்டப்படுகிறது ?..
பதில் கட்டாயம் காலம் தான் சொல்ல வேண்டும் .
பதில் என்பது கேள்வி கேட்டால் தானே தரப்படும் ..அத்தகைய கேள்விகளை கேட்கும் அளவிற்கு நம் அரசியல் தலைவர்கள் இல்லை..
தங்கள் மகனை எவ்வாறு மந்திரி ஆக்குவது..என்பதை சிந்திப்பதிலேயே பாதி பேர் தங்கள் சிந்தனையை செலுத்துகிறார்கள்...அவர்களுக்கு எப்படி கேள்விகள் கேட்பதற்கு நேரம் இருக்கும் .இன்னும் சில பேர் இருக்கிறார்கள் எந்த தொந்தரவும் வேண்டாம் என்று எஸ்டேட்டுக்கு சென்று விடுவார்கள்..
சாதிய அரசியலை விடுத்து ..கட்சி வேறுபாடுகள் மறந்து நம் இனத்திற்கு ஒரு நல்ல தலைமை..கேள்விகளை கேட்பதற்கு தேவை..அத்தலைமை வரும் நாள் தமிழர்க்கு திருநாளாகும்..

அடுத்து இடைத்தேர்தல்
இவ்வார்த்தைக்கு தான் எவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறது அநியாயம்,அராஜகம்,கொண்டாட்டம்(வாக்காளர்களுக்குதான்..).
இப்போதெல்லாம் யார் என்ன செய்தார்கள் .யார் நல்லவர்... யார் கேட்டவர் ...என்று வாக்காளர்கள் பார்ப்பதில்லை..யார் அதிகம் கொடுக்கிறார்கள் என்றே பார்க்கின்றனர் ..ஒரு மாத சம்பளத்தை ஒரு ஓட்டிற்கு தந்தால் யார் வேண்டாமென்பார்கள்..முன்பெல்லாம் இலை மறைவு..காய் மறைவாக நடந்தது இப்பொழுது..வெளிப்படையாகவே நடக்கிறது..இதை தேர்தல் ஆணையம்(அப்டினா என்ன ?) வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது வேதனையே..

சரி விடுங்க பாஸ் ...அரசியல் போதும் அறிவியலுக்குள் போவோமே ...

உலகத்திலேயே ரொம்ப ஸ்ட்ராங்கான பொருள் என்ன ? இப்படி ஒரு கேள்வி வந்தா எல்லாரும் பட்டுன்னு பதில் சொல்வீங்க "வைரம் "(கல்யாணம் முடிஞ்ச சில பேர் "தோச கரண்டி"ன்னு கூட சொல்லலாம் பாவம்..அவங்க வலி எனக்கு புரியுது ..)என்று..இனிமேல் அப்படி சொல்ல முடியாதுங்க ஏனா..அதைவிட ஸ்ட்ராங்கான ஒரு பொருளா கண்டுபுடிச்சிட்டாயங்க..அதோட பேரு.. "லான்ஸ்டாலைட்" சோ இனி "லான்ஸ்டாலைட்" என்றே பதில் சொல்லுங்க..மச்சிஸ்..

அடுத்த தகவல்..விண்வெளில உருவாகிக்கொண்டிருக்கிற ஆய்வுக்கூடத்துக்கு புதுசா இப்பொழுது மூணு பேர் போயிருக்றாங்க ..ஏற்கனவே அங்க மூணு மாசம் தங்கிருக்றவங்க..இப்ப ஏக குஷில இருக்கங்க்லாம்பா புது கம்பெனி கிடைக்க போகுதுல அவங்களுக்கு. சோ..மொத்தம் அங்க ஐந்து பேர் இருக்றாங்க இப்ப..
(இவ்ளோதான்யா உலகம்..!)

கொசுறு தகவல் எதோ செவ்வாய் கிரகத்துக்கு டூர் வேற கூட்டிட்டு போகபோரான்கலாம் மொத்தம் ஐந்நூறு நாட்களாம் காசிருக்ரவங்க ரெடி ஆகிக்கோங்கோ.... !

புரியுது...
உங்க நிலைமை எனக்கு புரியுது..
இதுக்கு மேல மொக்கை போட முடியாதுன்னு நினைக்கிறேன்..சோ
இப்ப நிறுத்திக்றேன்..நெக்ஸ்ட் மீட் பண்றேன்..
நான்மிழன்.


(எழுதினது பிடித்ததென்றால் கமெண்டுங்க...பிடிக்க வில்லை என்றாலும் கமெண்டுங்க...
அடுத்த
வருஷம் மீட் பண்ணுவோம் ...நன்றி !)


Sunday, December 27, 2009

!முதல் முயற்சியாக சிறிது நகைச்சுவையோடு எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்..ரசிப்பீர்கள் என்று நினைத்து !

தமிழ் பாடல் என்று தற்சமயம் வரும் பாடல்களில் வரும் வார்த்தைகள் தமிழ் தானா என்று பல சமயம் எனக்கு சந்தேகம் வருவதுண்டு ..சில பாடல்களெல்லாம் ஒரு நாலஞ்சு தடவை கேட்டாதான் அது தமிழ் தாணு தெரியுது..

ஒரு பக்கம் "நாக்க முக்க நாக்க முக்க" என்று எந்த மொழினே தெரியாம கதருறாங்க...இன்னொரு பக்கம் ஆத்திச்சுடி...ஆத்திச்சுடி ...என்று தமிழிலேயே?? வெறி கொண்டு ஆடுறாங்க..இது ரெண்டையும் கேட்டு ..வாண்டுங்க வீட்ல போடற ஆட்டம் ..பெரும் ஆட்டம்...

இதுல என்ன வேடிக்கை என்றால் இது மாதிரி எந்த மொழியும் சாராத ஒரு பாடலை ரசிப்பது பெருமை ,நல்ல கருத்துள்ள பழைய பாடல்களைக் கேட்பதே கேவலம் என்றும் நினைக்கும் நம்ம யூத்ஸ் (நானுந்தாம்பா) நிலை..பரிதாபம்.. நான் புதுமைக்கு எதிரானவன்லாம் கிடையாது பா..ஆனா நம்ம பழைய பாட்டுக்களையும் சிதைக்காம பாதுகாக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்..

சரி விடுங்க பாஸ் ..அறிவுரை ஸ்டைலில் போகுது ...பிறகு ஜனநாயக நாடு ,ரசிப்பு சுதந்திரம் இல்லை என்று யாரவது கமெண்ட்கொடுக்க போறீங்க ...
சாம்பிளுக்கு இந்த பாவேந்தர் பாடல்கள..கேளுங்க மச்சான்களா!...நான் டைலமோ..டைலமோ...கேக்கபோறேன் ஹி....ஹி...

மீண்டும் அடுத்த சந்திப்பில் இன்னும் பேசுவோம்..

நான் தமிழன்..

Thursday, December 17, 2009

!!என்னைக் கவர்ந்த கவிப்பேரரசின் கவிதை..உங்களையும் கவரும்..!!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் ...
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே...
90 நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்...
800 ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி...

பார்வையிலே சில நிமிடம்...
பயத்தோடு சில நிமிடம்...
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்...
இலக்கணமே பாராமல்...
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த...
மோகத்தில் சில நிமிடம்...

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை ...
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை...
யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை...
இருவருமே தொடங்கி விட்டோம் இதுவரைக்கும் கேள்வி இல்லை...

அச்சம் களைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய் ...

ஆடை களைந்தேன்
வெட்கத்தை நீ அணிந்தாய்...

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும் ...
கடைசியிலே அழுத கண்ணீர் மட்டும் கையில் இன்னும் ஒட்டுதடி ....