Sunday, November 27, 2011

என் காதலியே...

மனதில் பிறந்து ..
மூளையில் வளர்ந்து ..
பேனாவில் இறங்கி ..
கவிதைகளாய் இறக்கிறது என் காதல் ..
மீண்டும் அவளை பார்க்க..
மறுபிறவி கொள்கிறது மனதில் கனவோடு..
மீண்டும் இறக்க..
சொல்லாமல் சேர்த்த காதல் ..
மனதை கனமாக்கி..
கண்ணீராய் முட்டி நின்று ..
தனிமையில் அழ செய்கிறது ..
இறுதியில் கவிதைகளாய் செத்து விழுகிறது ..
 தோல்வி உறுதியாயினும் , வேண்டும்..
என் காதல் கங்கை வற்றும் முன்...
வந்து விடு 
என் காதலியே...