Monday, October 31, 2011

வாழ்க வாழ்க ..!

தெளியா மயக்கம் 
தலை சுற்றி நான் உளற
தலை சாய்த்தேன்..
எல்லாம் புரிந்தவளாய் 
சிரித்தாள் ..காதல் பேசினாள்..
முத்தம் கேட்க ...
வைத்தாள் கன்னத்தில் ..
கட்டி நிற்க கடிந்த சொல் இல்லை..
முத்தம் முத்தம்..
 முத்தம் மட்டுமே !
"ஏன் இவ்வளவு அழகு ?"
நான் கேட்க ..பதில் இல்லை..
"புன்னகை மட்டும் "
வேறென்ன செய்ய ..
வைத்தேன் முத்தம் பரிசாய்..",
போதை காட்சி இது ..
எல்லாப் புகழும் போதைக்கே 

சிலருக்கு "காதல் = போதை "
இல்லாதோர்,இழந்தோர்க்கு "போதையே காதல் "
"போதை=விஷம் .."
காதல் செய்யாதோர் செய்துதொலைத்தோர் , விஷம் என்பர் காதலை ..
ஆதல் ..
காதல் = போதை .எனலாம் 
போதை ஒழிய வேண்டும்..
காதல்.....??
தவறு.. தவறு ...
கவிதைகள் பிறக்க வேண்டும்..
காதல் போதை வாழ்க வாழ்க !
காதல் வாழ்க !
போதை அவள் வாழ்க !
வாழ்க வாழ்க ..!