Friday, December 31, 2010

! கல்லறைக்கு பூ வைத்தேன்.. !

காதல் காமம் ..
கலவை கலந்து ...
கற்று 
கிடந்து சிரிக்க..
கலை ரசித்து..
கன்னம் உரச..
கண் மூடி தழுவி..
கட்டி அணைக்க 
கண் மூடி 
காற்றில் தேடுகிறேன் ..
உன்னை..

விரல்கள் சொடுக்கெடுத்து...
வருடி தழுவ..
சொல்வதை செய்து..
சொல்லாததையும் செய்து..
தொடாமல் தொட்டு..
தேட ஆசை பற்ற..
கண் மூடி 
காற்றில் தேடுகிறேன் ..
உன்னை..

கண்களால் 
கடத்தி..
இதயத்தில் சிறை கொண்டு..
நூறு முத்தம் தர..
ஆசை ஆயிரம் 
உள்ளத்தில் வந்து குவிய..
அள்ளியெடுக்க யாருமின்றி..
கண் மூடி 
காற்றில் தேடுகிறேன் ..
உன்னை..

தேடி அலைந்து..
திக்கற்று நின்று..
மூளை கலங்கி..
தெளிவு பெற்று ..
உண்மை விளங்க..
புத்தாண்டு உனக்கு 
புத்துயிர் தர வேண்டி..
கண்ணீரைக் காணிக்கை செய்தேன் ..
உந்தன் 
கல்லறைக்கு பூ வைத்தேன்..

Sunday, December 19, 2010

காதல்..காதல்

காதல்
காதல்..!
கண்ணீர் தீர்ந்தது  அழுது..
இரவின் நீளம் நீண்டு..
தூங்காது விழித்து..
கண்கள் வீங்கி..
சிவந்து..
கண்ணீரில் காதலைக் கரைக்க...
முயல...
தரையில் விழுந்த  துளிகளில்
சிரித்தாள் அவள்..!
சேர்த்த சுகம் முழுதும்
புகைவிட்டு போக்க
முனைந்து..
இரவில் வானம் பார்க்க..
நிலவில் சிரித்தாள்..!
கை விட்டு தானே
தாவிக் குதித்தது சிகரட் ..
கண்ணீர் முட்டி நின்றேன்
அவள் சிரிப்பைக் கண்டு..

பின்னிரவுக் கனவில்..
சேர்த்த  நினைவுகள்...
வந்து குவிய...
கனவெலாம் வந்தாள்..

வந்தவள்  முத்தம்..
நெற்றியில் தர..
கன்னத்தில் வேண்டுமென்றேன்..
சிரிப்பால் மழுப்பி..
முகம் சிவக்க நின்றாள்..
நெற்றிக்குங்குமமும் சேர்ந்து சிவந்திருந்தது ..
"தினமும் வருக"
என்று கோரிக்கை வைக்க..
"கன்னத்தில் முத்தமிட்டாள்"..
என் முகம் சிவந்தது..
காதல் பொங்கி ..
திகட்டி  நிற்க..
கண்கள் சிமிட்டினாள்...
விழித்தேன்..
திகட்டிய காதல் தேடினேன்..
வெறுமை
மிச்சம்..
கண்களில் கண்ணீர் சொரிய...
காதல்..
காதல்..!

Saturday, December 11, 2010

! என் ஆசை !

கண்கள் கைகளால் பேசி 
கோபப்பட்டு...
செல்லமாய் திட்டி ...
கன்னம் கிள்ளி..
உரசி..
தலை கோதி..
பின்னிருந்து அனைத்து..
கழுத்தில் முத்தமிட்டு..
காதல் பேசி..
கொஞ்சி..
காபி தந்து ..
முத்தமிட்டு..ஊக்குவித்து..
தோள் சாய்ந்து..இளைப்பாறி..
இன்பம் தந்து..
சேர்ந்து.. சிரித்து..
கதை பேசி..
கற்று...
சேர்ந்து கவி எழுதி ..
தாள்கள் கசக்கி 
குப்பை தொட்டி நிரப்பி ..
தலையணை சண்டையிட்டு ..
கட்டியணைத்து...
சமாதானம் செய்து..
வெற்றி பெற்று 
இதயம் திருடி...
வாழ்க்கை ரசிக்க..
ஆசை..
கனவில் நீ இருந்தும்...
 நிஜத்தில்
தேடுகிறேன்..
"உன்னை.." 
யாரென்று தெரியாமல்...
காணா 
கனாக் 
காதலியே ...
"உன்னை.."!

Wednesday, December 1, 2010

!நாய்கள்..நாய்கள்..!

!நாய்கள்.. நாய்கள்..!
எங்கள் பெண்கள் 
பினமானாலும் 
விடாது துரத்தி 
தேடும்..!
பிணம் தின்னி நாய்கள்..!
நாய்கள்.. நாய்கள்..!

கண்கள் கைகள் 
கட்டி..
கத்தியால் குத்தி..
கீறி எட்டி உதைத்து..!
பின்னிருந்து..சுட்டு..!
வீரம் காட்டி..
வெறி தீர்க்கும் நாய்கள்..!
நாய்கள் நாய்கள்..!

சிதறிய மண்டைகள்..
எலும்புகள்..நொறுங்கிக் கிடக்க..!
ரத்தக் குளத்தில்..!நின்று..
குரைத்து கொண்டாடும்..நாய்கள்..!
நாய்கள்..! நாய்கள்..!

ரத்தங்கள் ஆறாய் ஓட..
வெற்றியென குரைத்து 
 கீதம் 
பாடும் நாய்கள்..!
நாய்கள்..நாய்கள்..!

செத்து விழுந்தவரை 
இழுத்துப் போட்டு  புதைத்து..
புதைத்து..!
ரத்தங்கள் ஊற்றி 
ஊற்றி..!
சாத்தான்கள் ஓலமிட்டு..
அமைதியாய் இருக்கும்..!
நாய்கள்..
நாய்கள்..!