Sunday, December 19, 2010

காதல்..காதல்

காதல்
காதல்..!
கண்ணீர் தீர்ந்தது  அழுது..
இரவின் நீளம் நீண்டு..
தூங்காது விழித்து..
கண்கள் வீங்கி..
சிவந்து..
கண்ணீரில் காதலைக் கரைக்க...
முயல...
தரையில் விழுந்த  துளிகளில்
சிரித்தாள் அவள்..!
சேர்த்த சுகம் முழுதும்
புகைவிட்டு போக்க
முனைந்து..
இரவில் வானம் பார்க்க..
நிலவில் சிரித்தாள்..!
கை விட்டு தானே
தாவிக் குதித்தது சிகரட் ..
கண்ணீர் முட்டி நின்றேன்
அவள் சிரிப்பைக் கண்டு..

பின்னிரவுக் கனவில்..
சேர்த்த  நினைவுகள்...
வந்து குவிய...
கனவெலாம் வந்தாள்..

வந்தவள்  முத்தம்..
நெற்றியில் தர..
கன்னத்தில் வேண்டுமென்றேன்..
சிரிப்பால் மழுப்பி..
முகம் சிவக்க நின்றாள்..
நெற்றிக்குங்குமமும் சேர்ந்து சிவந்திருந்தது ..
"தினமும் வருக"
என்று கோரிக்கை வைக்க..
"கன்னத்தில் முத்தமிட்டாள்"..
என் முகம் சிவந்தது..
காதல் பொங்கி ..
திகட்டி  நிற்க..
கண்கள் சிமிட்டினாள்...
விழித்தேன்..
திகட்டிய காதல் தேடினேன்..
வெறுமை
மிச்சம்..
கண்களில் கண்ணீர் சொரிய...
காதல்..
காதல்..!

3 comments:

  1. நல்லாயிருக்கு நண்பா!

    ReplyDelete
  2. அழகாக சொல்லிருகீங்க !!

    ReplyDelete