Wednesday, December 1, 2010

!நாய்கள்..நாய்கள்..!

!நாய்கள்.. நாய்கள்..!
எங்கள் பெண்கள் 
பினமானாலும் 
விடாது துரத்தி 
தேடும்..!
பிணம் தின்னி நாய்கள்..!
நாய்கள்.. நாய்கள்..!

கண்கள் கைகள் 
கட்டி..
கத்தியால் குத்தி..
கீறி எட்டி உதைத்து..!
பின்னிருந்து..சுட்டு..!
வீரம் காட்டி..
வெறி தீர்க்கும் நாய்கள்..!
நாய்கள் நாய்கள்..!

சிதறிய மண்டைகள்..
எலும்புகள்..நொறுங்கிக் கிடக்க..!
ரத்தக் குளத்தில்..!நின்று..
குரைத்து கொண்டாடும்..நாய்கள்..!
நாய்கள்..! நாய்கள்..!

ரத்தங்கள் ஆறாய் ஓட..
வெற்றியென குரைத்து 
 கீதம் 
பாடும் நாய்கள்..!
நாய்கள்..நாய்கள்..!

செத்து விழுந்தவரை 
இழுத்துப் போட்டு  புதைத்து..
புதைத்து..!
ரத்தங்கள் ஊற்றி 
ஊற்றி..!
சாத்தான்கள் ஓலமிட்டு..
அமைதியாய் இருக்கும்..!
நாய்கள்..
நாய்கள்..!

No comments:

Post a Comment