Thursday, July 21, 2011

பேனாவும் பெண்பாலோ?

கண்ணீர் மல்கி      
கவிதை  தீட்ட 
மை தீர்ந்தது.. 
பேனா  உதறினேன் ..
"அவள்  என்னை  
உதறி  அறைந்தது"  
கண்ணில்  தெரிய ..
தெரித்தது மை..
என்  உயிர் தெரித்தாற்போல்  ..
கிறுக்கி  எழுத  முயல ..
தாள் கிழித்தது ..
என் அருமை  பேனா!
அவள் என் இதயம்  கிழித்தாற்போல் ..!
பேனாவும்  பெண்பாலோ?