Tuesday, May 17, 2011

!என்ன செய்யப்போகிறாளோ ? !


கை பிடித்து சேர்ந்து நடந்து 
கால் வலிக்க,
கரையோரம் உட்கார்ந்தோம் .
அவள் ஏதோ பேசினாள்..
அழகால்  கொன்றாள்..
செத்து ரசித்தேன் ..
"அவள் அழகு.."

அவள் கூந்தல் கடலில் ...
மூழ்கி இறக்கலாம் ..
"அவள் அழகு" ..

தலை சாய்த்து என்னவென்றாள்..
தலை சுற்றியது அழகு ..
"அவள் அழகு" ..

கொட்டிகிடக்கும் அழகில் 
பூத்துக்குலுங்கும் 
அவள் சிரிப்பு..அழகு 
"அவள் அழகு" 

மனதில் பிறந்த கவிதை அடக்கி 
சிரித்தேன் என்னவென்றாள் ...சிரித்தபடி 
சிரிப்பால் பதில் சொன்னேன் வார்த்த்தைஇன்றி..
புரிந்தவளாய் சிரித்தாள் ..
பார்த்துக்கொண்டே  இருந்தோம் ..
சேர்ந்தே கொன்றோம்  காலத்தை..

சூரியன்  கடலில் மறைய 
அவள் அழகு கூடியதாய் என் கண்கள் பார்த்தது..
இடைவெளி குறைத்து 
அலுங்காமல் அவளை அனைக்க முயல ..
முறைத்தாள்..
அழகு ..கொள்ளை அழகு 
அவள் ..

முறைத்தால் என்ன ..
முத்தம் வைத்தேன் கைபடாமல் கன்னத்தில் ..
கசங்காத ரோஜா, சிவந்த உதடுகள் ..
கண்களில்   பட
அங்கேயும் ஒன்று
 தந்து  விட்டு 
நான்  மெதுவாய் ஓட  
சிரித்தபடி  என்னைத் துரத்தினாள்..
ஓடினேன் ..ஓடினேன்..
எழுந்துவிட்டேன்...
நாளை கனவில் ..
என்ன செய்யப்போகிறாளோ ?