Thursday, March 31, 2011

புரியாத புதிர் வாழ்க்கை ..! என் கவிதை ??

வா! என்றழைத்து ..!
ஆசை காட்டி 
மயக்கி..
சிரித்தபடி அனைத்து 
செல்கிறது  வாழ்க்கை
நம்மை மரணம் நோக்கி 
இதனிடையில் 
ஆர்மோன்களை மூளை தட்ட 
போதை தலைக்கேறி 
கிறுகிறுத்து 
அவளைத் தேடுகிறோம் ..
உண்மை அறியாது ..

வாழ்க்கை 
சோகம் மகிழ்ச்சி தந்து 
உன்னை உனக்கு எதிரியாக்கும்
பார்த்து சிரிக்கும்.

சோகங்கள் குவிந்து 
மனதெங்கும்  நிரம்பி வழிய 
உடலெங்கும் சோக விசம் 
பரவி மனதை உடைத்து ..
அழுத்துகிறது 
உதவி உதவி !

அழுகை முட்டிய நாட்கள் 
நீண்டு சிரிக்கின்றன 
 என்னை பார்த்து 
காரணமின்றி ..

புரியாத புதிர் 
வாழ்க்கை ..!
என் கவிதை ??

Sunday, March 20, 2011

!நீ திருடிய என் வெற்றி.!

என் தோல்வியென  நினை ..!
நீ செயி..!
என் தலையில் குட்டு 
ஏறி நடந்து செல் ..
மேல்நின்று சிரி.
"நேர்மை சாகடி" ..
நீ புகழ் கொள்..
வானில் மித ..
காரணம் நான்
"என் தோல்வி" 

நீ செயி மித..
உன் வெற்றி உன் தலைக்கு செல்லும் ..
 தலை பெருக்கும்..
ஆணவம் பரவும்..
மதியாது செல்வாய்..

என்னை பார் சிரி..
தோல்வி இனிக்கிறது .
வரப்போகும்  வெற்றி கண்டு.

நீ கோபம் கொள் ..
தவறு செய்..
தவறுகள் பெருகும் ..
மூழ்கடிக்கும்..
மூச்சுமுட்டும்..
நீ கொன்ற நேர்மை 
உன்னை கீறும் 
குத்தி சாகடிக்கும்..
"செத்துப்போவாய்.."

என்னை மண்ணில் புதைத்தாய்..
உள்ளே தெரிந்தது உன் எதிர்காலம்..
முளைத்து  வருவேன்..
நான் விடேன்..! என்று 
நீ திருடிய 
என் வெற்றியைத் தேடி ..