Thursday, March 31, 2011

புரியாத புதிர் வாழ்க்கை ..! என் கவிதை ??

வா! என்றழைத்து ..!
ஆசை காட்டி 
மயக்கி..
சிரித்தபடி அனைத்து 
செல்கிறது  வாழ்க்கை
நம்மை மரணம் நோக்கி 
இதனிடையில் 
ஆர்மோன்களை மூளை தட்ட 
போதை தலைக்கேறி 
கிறுகிறுத்து 
அவளைத் தேடுகிறோம் ..
உண்மை அறியாது ..

வாழ்க்கை 
சோகம் மகிழ்ச்சி தந்து 
உன்னை உனக்கு எதிரியாக்கும்
பார்த்து சிரிக்கும்.

சோகங்கள் குவிந்து 
மனதெங்கும்  நிரம்பி வழிய 
உடலெங்கும் சோக விசம் 
பரவி மனதை உடைத்து ..
அழுத்துகிறது 
உதவி உதவி !

அழுகை முட்டிய நாட்கள் 
நீண்டு சிரிக்கின்றன 
 என்னை பார்த்து 
காரணமின்றி ..

புரியாத புதிர் 
வாழ்க்கை ..!
என் கவிதை ??

3 comments:

  1. ANNA SEMA LINES NA YELLAM .............

    ReplyDelete
  2. அருமை நண்பா, கவிதைகளையெல்லாம் தொகுத்து புத்தகமாக அச்சிடுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. @தனுஷ் நன்றி தம்பி..!
    @மார்டின் நன்றி அண்ணே!

    ReplyDelete