Saturday, February 4, 2012

சொல் என்கிறாய்.. என்ன சொல்ல கண்ணே ?

சொல் என்கிறாய்.. !
என்ன சொல்ல..
கண்ணே..
கவிதை சொல்லவா..?
காதல் பற்றி..
உன்னை பற்றி..
இல்லை உன் கண்ணை பற்றி..
உன் இதழ் பற்றி..
பசி தீர்க்கும் கன்னம் பற்றி..
பற்றி இழுக்கும் உன் அழகை பற்றி..
மெய் சொல்லவா ?
இல்லை பொய் சொல்லவா?
சொல் என்கிறாய்..
என்ன சொல்ல கண்ணே ?
சொல்..!