Wednesday, September 30, 2009

!!!என்னைக் கவர்ந்த ஒரு ஈழத்துக் கவிதை..."கன்னத்தில் முத்தமிட்டால்" படத்திலிருந்து!!!


எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன...
எங்கள் இமைகள் கவிழ்ந்துள்ளன...
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன...
எங்கள் பற்கள் கண்டிப்போய் உள்ளன...
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்...
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக...
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக...
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக...
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக...
எங்களை முதுகில் கசையால் அடிக்குக...
எங்கள் முதுகு தொர்பில் துளர்ந்து போகட்டும்..




.......தாழ்ந்த புருவங்கள் ஒரு நாள் நிமிரும்..
கவிழ்ந்த இமைகள் ஒரு நாள் உயரும்...
இறுகிய உதடுகள் ஒரு நாள் துடிதுடிக்கும்...
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்...
அதுவரை நீங்கள் எங்களை ஆளுக...
அது வரை உங்கள் வல்லம் ஓங்குக...

Monday, September 14, 2009

!!என் பள்ளிக்காலத்தில் படிக்க வேண்டுமே என்று கஷ்டப்பட்டு வேண்டா வெறுப்பாய் படித்த செய்யுள் இப்பொழுதுதான் இச்செய்யுளின் சுவையை உணர்கிறேன்!!


எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பணியைப் போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

-மகாகவி சுப்ரமணிய பாரதி

Wednesday, September 9, 2009

!!இதோ இந்த வார கிறுக்கல் உங்களுக்காக!!.............................நிழற்படம்........................


"என்னவள்" நிழற்படம கிட்ட வேண்டி
நெடுநாளாய் தவமிருந்தேன் ....
அவ்வரம் கிடைக்க வேண்டி...
அனுதினமும் காத்திருந்தேன் ...
ஆத்திகனாவும் மாறிவிட்டேன்...


கிட்டிவிட்ட இத்திருநாளே...
என் வாழ்வின் பெருநாளாம் .


கண்டிருந்தால் கட்டியனைத்து...
நன்றி! கூறியிருப்பேன்...
நான் கேட்ட வரம் ஈன்றதினால் (இறைவனை)

ஆனால்......
கண்டதில்லை கண்கள் கொண்டு...
இன்று வரை இறைவனை ...

"என் செய" என எண்ணியவாறு...
படுத்தபடி பார்த்திருந்தேன்
விட்டத்தை வெறித்தவாறு ...
"பளிச் "சென்று மின்னலொன்று
அச்சமயம் என் மதியில் பாய ..
பட்டென்று வெகுண்டெழுந்தேன்...
பட்டாசை பாயிலிருந்து...

அவசரமாய் அருகிலிருந்த
அலமாரி கதவு திறந்து...
மிக அழகாய் "என்னவள்" வீற்றிருக்கும்..
"அவள்" திருவுருவநிழற்படம் எடுத்து .....
நன்றி கூறினேன்...
கட்டியணைத்தேன்...
இன்பம் கண்டேன்...

இறைவனையே கண்டுவிட்டேன்...
என்ற இறுமாப்பில் ...
துயில் கொள்ள சென்று விட்டேன்...

-- அவள் பித்தன் (நான் தமிழன் )

Tuesday, September 8, 2009

!!முள்வேலிக்குள் முடங்கிப் போய் இருக்கும் நம் தமிழ் உறவுகளுக்காக என் மதியில் தோன்றியது !!


கையருந்து..... காலருந்து....

காலைக் கடனையும்..

ஒரு வேளை உணவையும்...

ஓரிடத்தில் முடித்துவிட்டு ...

ஒட்டிய கன்னத்தோடு ...

ஓடி வரும் கண்ணீர் துடைத்து...

கேட்பாரின்றி அநாதையாய்...

கொடுங்கோலன் ஆட்சியிலே ....

கொடுமை பல அனுபவிக்கும் ....

நம் தமிழ் மக்களின் நிலை கண்டு...

சுய நினைவோடு"சிந்தியுங்கள் "...

என்னருமை தமிழர்களே !...

முள் வெளிக்குள்....

மூனரை லட்சம் உயிர்கள்...

அவ்வுயிர்கள்...

வயிர் நிறைய "இல்லை" உணவு

கொடுத்தனுப்பிய உணவுகளையும்

கொட்டிகொடுத்த பொருட்களையும்

கெட்டுப்போக விட்டுவிட்டு

"!சாகட்டும் தமிழினம் பிணியினிலே!",

என்று கனைக்கிறது...

கழுத்தைக் கூட்டம் தீவினிலே !

இக்கொடுமைகள் களைய

"ஜாதி", "மதம்" மறந்து...

"இனம்", "மொழி" ஒன்றே....

என்பதை நினைவு கூர்ந்து...

முள்வேலிக்குள் முடங்கி இருக்கும்

நம் தமிழ் மக்களினை வெளிக்கொணர ...

முயற்சி செய்வோம் !

நம் உரிமைகளை மீட்டெடுப்போம் !

வாருங்கள்.. தமிழர்களே...!

வாருங்கள்....!

இப்படிக்கு ,

நான் தமிழன் .