Tuesday, September 8, 2009

!!முள்வேலிக்குள் முடங்கிப் போய் இருக்கும் நம் தமிழ் உறவுகளுக்காக என் மதியில் தோன்றியது !!


கையருந்து..... காலருந்து....

காலைக் கடனையும்..

ஒரு வேளை உணவையும்...

ஓரிடத்தில் முடித்துவிட்டு ...

ஒட்டிய கன்னத்தோடு ...

ஓடி வரும் கண்ணீர் துடைத்து...

கேட்பாரின்றி அநாதையாய்...

கொடுங்கோலன் ஆட்சியிலே ....

கொடுமை பல அனுபவிக்கும் ....

நம் தமிழ் மக்களின் நிலை கண்டு...

சுய நினைவோடு"சிந்தியுங்கள் "...

என்னருமை தமிழர்களே !...

முள் வெளிக்குள்....

மூனரை லட்சம் உயிர்கள்...

அவ்வுயிர்கள்...

வயிர் நிறைய "இல்லை" உணவு

கொடுத்தனுப்பிய உணவுகளையும்

கொட்டிகொடுத்த பொருட்களையும்

கெட்டுப்போக விட்டுவிட்டு

"!சாகட்டும் தமிழினம் பிணியினிலே!",

என்று கனைக்கிறது...

கழுத்தைக் கூட்டம் தீவினிலே !

இக்கொடுமைகள் களைய

"ஜாதி", "மதம்" மறந்து...

"இனம்", "மொழி" ஒன்றே....

என்பதை நினைவு கூர்ந்து...

முள்வேலிக்குள் முடங்கி இருக்கும்

நம் தமிழ் மக்களினை வெளிக்கொணர ...

முயற்சி செய்வோம் !

நம் உரிமைகளை மீட்டெடுப்போம் !

வாருங்கள்.. தமிழர்களே...!

வாருங்கள்....!

இப்படிக்கு ,

நான் தமிழன் .

No comments:

Post a Comment