இது என் பக்கங்கள்... நான் கிறுக்கிய பக்கங்கள், நான் ரசித்த பக்கங்கள்...படித்து மறவாது தங்கள் எண்ணங்களையும் பதிவு செய்திடுங்கள்...நண்பர்களே!! இப்படிக்கு, நான் தமிழன்.
Wednesday, September 9, 2009
!!இதோ இந்த வார கிறுக்கல் உங்களுக்காக!!.............................நிழற்படம்........................
"என்னவள்" நிழற்படம கிட்ட வேண்டி
நெடுநாளாய் தவமிருந்தேன் ....
அவ்வரம் கிடைக்க வேண்டி...
அனுதினமும் காத்திருந்தேன் ...
ஆத்திகனாவும் மாறிவிட்டேன்...
கிட்டிவிட்ட இத்திருநாளே...
என் வாழ்வின் பெருநாளாம் .
கண்டிருந்தால் கட்டியனைத்து...
நன்றி! கூறியிருப்பேன்...
நான் கேட்ட வரம் ஈன்றதினால் (இறைவனை)
ஆனால்......
கண்டதில்லை கண்கள் கொண்டு...
இன்று வரை இறைவனை ...
"என் செய" என எண்ணியவாறு...
படுத்தபடி பார்த்திருந்தேன்
விட்டத்தை வெறித்தவாறு ...
"பளிச் "சென்று மின்னலொன்று
அச்சமயம் என் மதியில் பாய ..
பட்டென்று வெகுண்டெழுந்தேன்...
பட்டாசை பாயிலிருந்து...
அவசரமாய் அருகிலிருந்த
அலமாரி கதவு திறந்து...
மிக அழகாய் "என்னவள்" வீற்றிருக்கும்..
"அவள்" திருவுருவநிழற்படம் எடுத்து .....
நன்றி கூறினேன்...
கட்டியணைத்தேன்...
இன்பம் கண்டேன்...
இறைவனையே கண்டுவிட்டேன்...
என்ற இறுமாப்பில் ...
துயில் கொள்ள சென்று விட்டேன்...
-- அவள் பித்தன் (நான் தமிழன் )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment