Saturday, April 24, 2010

!அது ஒரு மழைக்காலம்.!

அது ஒரு மழைக்காலம்..
என் தோட்டத்து ரோஜாவின் இதழ்களில்..
முத்தமிட்டு கொண்டிருந்தன மழைத்துளிகள்..
சில்லிட்டு பூத்திருந்தால் என் தோட்டத்து ஒற்றை ரோஜா..

வெளியே கொட்டும் மழை..
அப்பொழுது ஒரு வெள்ளை ரோஜா..
நடக்கும் சக்தி கொண்ட அற்புத ரோஜா..
நான் பார்த்ததிலேயே அழகிய ரோஜா..

இறைவனிடம் அழகு கொடை பெற்று..
குடை கொண்டு நடந்து வந்தாள்...
அவள் என்ற அந்த பெயர்தெரியா ரோஜா..
தன்னை முத்தமிட வந்த மழைத்துளிகளைக்..
குடை கொண்டு தடுத்தபடி நடந்தாள் ..
சோ!! என்று அழுதபடி குடையிலிருந்து தெறித்துத்
தற்கொலை செய்தன.மழைத்துழிகள்
தோல்வியைத் தாங்காது
அவளைத் தொட்டவை சில அங்கேயே..
மோட்சம் பெற்றன..பாவம்!
என் கண்ணிலிருந்து..மறையும் வரை..
பார்த்தேன் ..அவளை கண்ணிமைக்காது..
என் அரும்பு மீசையை தடவியபடி..

பெயர் தெரியா அரோஜாவின்..நினைவில் ..
இருந்து எழவில்லை பல மணி நேரத்திற்கு

மழை வெறித்தது..
பிரியா விடை பெற்றன என் தோட்டத்து
ரோஜாவின் மழைத்துழிகள்..
அன்று என் தோட்டத்தில் புதிதாய் ஒரு மொட்டு..
பூத்திருந்தது..
என் இதயத்திலும் கூட..புதிதாய் ஒன்று...

பசுமையாய் என் நினைவில் இன்றும் உண்டு..
அந்த பத்து நிமிட முதல் காதல்..
இன்று வரை நான் மீண்டும் காணாத அந்த வெள்ளை ரோஜா..
அது ஒரு அழகிய மழைக்காலம்..


Saturday, April 10, 2010

!அவ்வேழு மணி நேரக் கனா.!

கண்களாலே கவி பாடி ..
எனைத் தாண்டி நீ சென்றாய்..
அன்று முதல் தேடுகிறேன்...
என் இதயத்தைத் தொலைத்துவிட்டு..


அன்பே !
களவாடிய என் இதயம் வேண்டாம்..
காதலோடு உன் இதயம் வேண்டும்...
தருவாயோ..?

உனைக் கண்ட நாள் முதலே
கனாக் காங்கிறேனடி தோழி..
நம் எதிர்காலம் பற்றி..
அவ்வேழு மணி நேரக் கனாக் காண..
பதிநேழுமணி நேர தவம் யுகங்களாய்..
கழிவதேனோ?

ஏழு மணி நேரம் கனா..
கனா முழுதும்..
நீ..
கவிதை..
நம் காதல்..
ஊடல்..
திகட்டா..முத்தம்..
குழந்தையின் சங்கீதம்..
நேற்றைய கனாக் கவி வரி
இன்னும் என் நினைவில் உண்டு..
"மண் தின்னும் நாள் வரையிலும்
சேர்ந்திருப்பேன் உன்னோடு இதே காதலோடு.."
பகல் கனவு அல்லவே...ஆதல் .
கனா மெய்ப்பட வேண்டும் தோழி..
நிஜத்திலே..
மண் தின்னும் வரையில் சேர்ந்திருக்க
அனுமதிப்பாயோ?..
உன் மடியில் நான் உயிர் விட..
வரம் தருவாயோ?
என் காதலை
ஏற்பாயோ?..
ஏற்பாயோ?

கூவியது அலாரம்..
கண் விழித்தேன்..
சே!
கனா..
கனாவிலே கவிதை..
கவிதையிலே கனா..
நிஜத்திலே காணாக் காதலை..பற்றி..
கனா..
கனாவிலே கவிதை..
கவிதையிலே கனா..
சிரிப்பு வந்தது..
எனக்கு