என் தோட்டத்து ரோஜாவின் இதழ்களில்..
முத்தமிட்டு கொண்டிருந்தன மழைத்துளிகள்..
சில்லிட்டு பூத்திருந்தால் என் தோட்டத்து ஒற்றை ரோஜா..
வெளியே கொட்டும் மழை..
அப்பொழுது ஒரு வெள்ளை ரோஜா..
நடக்கும் சக்தி கொண்ட அற்புத ரோஜா..
நான் பார்த்ததிலேயே அழகிய ரோஜா..
இறைவனிடம் அழகு கொடை பெற்று..
குடை கொண்டு நடந்து வந்தாள்...
அவள் என்ற அந்த பெயர்தெரியா ரோஜா..
தன்னை முத்தமிட வந்த மழைத்துளிகளைக்..
குடை கொண்டு தடுத்தபடி நடந்தாள் ..
சோ!! என்று அழுதபடி குடையிலிருந்து தெறித்துத்
தற்கொலை செய்தன.மழைத்துழிகள்
தோல்வியைத் தாங்காது
தோல்வியைத் தாங்காது
அவளைத் தொட்டவை சில அங்கேயே..
மோட்சம் பெற்றன..பாவம்!
என் கண்ணிலிருந்து..மறையும் வரை..
பார்த்தேன் ..அவளை கண்ணிமைக்காது..
என் அரும்பு மீசையை தடவியபடி..
பெயர் தெரியா அரோஜாவின்..நினைவில் ..
இருந்து எழவில்லை பல மணி நேரத்திற்கு
மழை வெறித்தது..
பிரியா விடை பெற்றன என் தோட்டத்து
ரோஜாவின் மழைத்துழிகள்..
அன்று என் தோட்டத்தில் புதிதாய் ஒரு மொட்டு..
பூத்திருந்தது..
என் இதயத்திலும் கூட..புதிதாய் ஒன்று...
பசுமையாய் என் நினைவில் இன்றும் உண்டு..
அந்த பத்து நிமிட முதல் காதல்..
இன்று வரை நான் மீண்டும் காணாத அந்த வெள்ளை ரோஜா..
அது ஒரு அழகிய மழைக்காலம்..