Saturday, April 10, 2010

!அவ்வேழு மணி நேரக் கனா.!

கண்களாலே கவி பாடி ..
எனைத் தாண்டி நீ சென்றாய்..
அன்று முதல் தேடுகிறேன்...
என் இதயத்தைத் தொலைத்துவிட்டு..


அன்பே !
களவாடிய என் இதயம் வேண்டாம்..
காதலோடு உன் இதயம் வேண்டும்...
தருவாயோ..?

உனைக் கண்ட நாள் முதலே
கனாக் காங்கிறேனடி தோழி..
நம் எதிர்காலம் பற்றி..
அவ்வேழு மணி நேரக் கனாக் காண..
பதிநேழுமணி நேர தவம் யுகங்களாய்..
கழிவதேனோ?

ஏழு மணி நேரம் கனா..
கனா முழுதும்..
நீ..
கவிதை..
நம் காதல்..
ஊடல்..
திகட்டா..முத்தம்..
குழந்தையின் சங்கீதம்..
நேற்றைய கனாக் கவி வரி
இன்னும் என் நினைவில் உண்டு..
"மண் தின்னும் நாள் வரையிலும்
சேர்ந்திருப்பேன் உன்னோடு இதே காதலோடு.."
பகல் கனவு அல்லவே...ஆதல் .
கனா மெய்ப்பட வேண்டும் தோழி..
நிஜத்திலே..
மண் தின்னும் வரையில் சேர்ந்திருக்க
அனுமதிப்பாயோ?..
உன் மடியில் நான் உயிர் விட..
வரம் தருவாயோ?
என் காதலை
ஏற்பாயோ?..
ஏற்பாயோ?

கூவியது அலாரம்..
கண் விழித்தேன்..
சே!
கனா..
கனாவிலே கவிதை..
கவிதையிலே கனா..
நிஜத்திலே காணாக் காதலை..பற்றி..
கனா..
கனாவிலே கவிதை..
கவிதையிலே கனா..
சிரிப்பு வந்தது..
எனக்கு

3 comments:

  1. மண் தின்னும் வரையில் சேர்ந்திருக்க
    அனுமதிப்பாயோ?..
    உன் மடியில் நான் உயிர் விட..
    வரம் தருவாயோ?

    என்ன ஒரு வைர வரிகள் !
    அருமை
    மிக அருமை.

    ReplyDelete
  2. அசத்திட்டீங்க......நெஞ்சைத் தொடும் வரிகள்...

    ReplyDelete
  3. நன்றி மிஸ்டர்.உடுக்கை !

    ReplyDelete