Wednesday, December 30, 2009

!எங்கோ படித்தது !

இந்தியன்: நீ ஒரு இந்தியன்…
தமிழன்: ஆம் நான் இந்தியன்…
இந்தியன் : உனக்கு சுதந்திரம் உண்டு அனால் பேச்சு சுதந்திரம் இல்லை…
தமிழன்: அதனால் என்ன சுதந்திரம் இருக்கிறதே…

இந்தியன் : நீ ஒரு இந்தியன்…
தமிழன்: ஆம் நான் இந்தியன்…
இந்தியன் : தமிழில் பேசலாம்.. கேள்வி கேட்ககூடாது….”
தமிழன்: சரி…..

இந்தியன் : நதி உனக்கு, நீர்மட்டும் அவர்களுக்கு…”
தமிழன் : பின் எப்படி நான் பயிர்செய்வது…
இந்தியன் : உன் நல்ல மனதிற்கு கடவுள் மழை தருவார்…
இனி கேள்வி கேட்க்ககூடாது…”
தமிழன் : ஓ… மறந்துபோனேன்..இனி கேட்கமாட்டேன்..

தமிழன் : ஐயோ என் சொந்தங்களை அடிக்கிறார்களாம்
அண்டை மாநிலத்திலே…
இந்தியன் :அடிப்பவனும் உன் சகோதரன் தான்…
தமிழன் : யார் சொன்னது…
இந்தியன் :நீதான் சொன்னாய் இந்தியர்கள் உன் சகோதரர்கள் என்று…
தமிழன் : ஓ…அப்படியானால் சரி…

இந்தியன் : தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள்….!
தமிழன்: எங்கே?
இந்தியன் : காஷ்மிரிலே…
நம் மண்ணை கேட்கிரார்கள் மாபாவிகள்..
தரலாமா ஒரு பிடிமண்ணும் மாற்றானுக்கு…
தமிழன் : பின் எதற்கு கொடுத்தீர்கள் கச்சதீவை?
இந்தியன் : ம்ம்… ம்… வாயை மூடடா”…

தமிழன் : மலேசியாவில் அடிக்கிரார்களாம் இந்தியனை…
இலங்கை கடற்படை சுடுகிறது இந்தியனை…
இந்தியன் : யார் சொன்னது அவர்கள் இந்தியனென்று….??
தமிழன் தானே…? ஸூத்திரன்”….

இந்தியன் : சரி சரி வரி கொடு…
தமிழன்: எதற்கு…!!?
இந்தியன் : நீ இந்தியன்..
தமிழன்: யார் சொன்னது..?
இந்தியன் : நான்தான் சொல்லுகிரேன், நீ இந்தியன்”..

இந்தியன் : என்னடா முறைக்கிறாய்…?”
தமிழன்: சிங்களவனுக்கு ஆயுதம் கொடுத்தாயா..?
இந்தியன் :ஆம் அதற்கென்ன..?
தமிழன் : அவர்கள் என் சொந்தம்…நீ கொடுத்தது என் பணம்..
இந்தியன் : அவர்கள் நம் தலைவனை கொன்றவர்கள்…
தமிழன் : யாரடா தலைவன்? என் தலைவன் பிரபாகரன்…

இந்தியன் : ராஜதந்திரியாரே… இவன் பிரபாகரன் என்றான்..!!!!
ராஜதந்திரி :ஆ… அவன் விழித்துக்கொண்டான்…
அவனை இருட்டறையில் அடையுங்கள்…
அவன் கேள்வி எழுப்புவான்…
மற்றவர் காதில் விழாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்…
அவன் தமிழன் எச்சரிக்கை !!!
இந்தியர்களே…. உசார்!”

5 comments:

  1. Ah. . Super. . Oru doubt. . Rajathandri yaar?. . C.m?

    ReplyDelete
  2. நம் இன அழிப்பிற்கு உடந்தையாக இருந்த மேனன்களும் ,நம்பியார்களும்.. ஈராஜதந்திரிகளுள் பிரதானமானவர்கள் !

    ReplyDelete
  3. கேரள மக்கள் மேல் அப்படி என்ன பகை உங்களுக்கு ????

    ReplyDelete
  4. naan ungaluku eluthiya munthiya comment-il koori irunthaen... unnai paettarathil un thai paerumai adaival endru.... athu thavaru ungalai thannudaya maarbill vaithirupatharkaaga... tamil thaaium paerumitham kolval.... ungal panni thodarattum tamiza

    ReplyDelete
  5. ப்ரீத்தி..தனிப்பட்ட கோபம்லாம் ஒன்னும் இல்லை..

    ஜெமி..தோடா !..

    ReplyDelete