Sunday, January 3, 2010

!டிசம்பர் 31 , என் கவிதை,அவதார் ,வேட்டைக்காரன் , , பிரணவ் மிஸ்ட்ரி !



வணக்கம் !
தமிழிஷிலும் ..தமிழ்மணத்திலும் எனது பதிவுகளை இணைத்திருக்கிறேன்..சனவரி 1 அன்று பதிவின் மூலம் வாழ்த்துச்சொல்ல முடியவில்லை.இப்போது சொல்றேன் "எல்லார்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்".
டிவில ஸ்பெசல் ப்ரோக்ராம் மாதிரி எதாவது புதுசா பதிவு செய்யனும்னுதான் ஆசை..ஆனா என்ன பண்றது முடியவில்லைமன்னிக்கவும் ..(எசுச் மீ ஹி ஹி ..)
"டிசம்பர் 31 பார்ட்டி ஒன்றிற்கு நம்ம கூட்டாளி பசங்க கூட்டிட்டு போனாங்க...ஒரு மேடை அதை சுத்தி 5000௦௦௦(என்னுநியானுலாம் கேக்கப்புடாது !) பேரு குதி குதின்னு குதிச்சிற்றுந்தாங்க .நாங்களும் போய் கொஞ்ச நேரம் குதிச்சிட்டு, கை கால ஆட்டிட்டு (டான்சுமா ...!)...இருந்தோம்.அப்போது ஒரு வெளிநாட்டவன் ஒரு பெண்ணுடன் வந்து அருகில் நின்று ஆடினான்..அப்பெண் என் அருகே வந்து ஆட நான் தெறித்து ஓடினேன்..என் நண்பன் "அட சே..! போடா டேய் _______வாழ்க்கையை என்ஜாய் பன்னதெரியாதவன்" என்று என்னை திட்டிவிட்டு அவளோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தான் ..நான் மரத்தைத் துணையாகக் கொண்டு சோகத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் ..அப்போ தேர்ரரா ஒரு தத்துவம் தோனுச்சு "டேய் மச்சான்களா நாம ஆயுசுல 1 வருஷம் குறையுதுடா..சோ எதுக்கு இந்த நியு இயர் கொண்டாட்டம் ..ஹிஹிஹி..!"..(ஓவரா இருக்குல்ல..ரூம் போட்டு யோசிப்போம்ல ..!) பார்டி முடியும் வரை ..சோகத்தோடு மரத்ல சாஞ்சுற்றுந்த என்னை அலேக்காய் தூக்கி வண்டில போட்டு வீட்டுக்கு தூக்கி வந்தார்கள் பிரென்ஸ்.. வீட்டுக்கு வந்தவுடன்"ஹேங் ஓவர்" ஆனவர்களை சாமாதானப் படுத்தி படுக்கவைத்துவிட்டு .. நான் ரெண்டு நாள் ஈமெயில் பார்க்கவில்லையே என்று ஜிமெயில் ஓபன் செய்தேன் ..வாழ்த்துச்செய்திகள் வந்து குவிய பெரிய ஆள் இல்லையே..! விரலால் என்னும் அளவுக்கு வாழ்த்துக்கள் வந்திருந்தன.. அதில் ஒரு வித்தியாசமான வாழ்த்து என்னை கன்னத்தில் ஓங்கி அடித்தது போன்றிருந்தது ..பார்ட்டிக்கு சென்றது தவறோ என்று தோன்றியது.. அவ்வாழ்த்தை இணைத்திருக்கிறேன்..

!"அந்த வாழ்த்துச் செய்தி" !

வருஷத்துல முத நாளே கவிதை எழுதுனா டெர்ரரரா..!இருக்குமே அப்டின்னு அன்றைக்கு ஒரு டேர்றோர் கவிதையும் எழுதினேன் ..!(ஆரம்பிசுடான்யா..!நீங்க சொல்றது கேக்குது..கேக்குது..)..
என் கடிகார முட்கள் மூன்றும்
பந்தயக் குதிரை என பறக்கிறது..
உன் வார்த்தை நான் கேட்டால்..

அதுவே கழுதை என நடக்கிறது..
உன் வார்த்தை நான் கேட்க
காத்திருந்தால்..
முட்களும் கூட ஆண் பால் தானோ ?
பெண்ணே, போடுகிறது இருவேடம் ..
உன்னாலே ..!

கவிதை எங்க? அப்டின்னு கேட்டு என்ன இன்சல்ட் பண்ணப்புடாது...பிறகு நா அழுது புடுவேன் அழுது..
( இப்பதான பாஸ் எழுத ஆரம்பிச்ருக்கேன் ..அட்ஜஸ்ட் பண்ணுங்க..)
நியு இயர் அன்னிக்கு கட்டாயம் படம் பாக்கணுமே ..தெய்வ குத்தம் ஆகிறக்குடாதிள்ள...? சோ ரெண்டு படம் பாத்தேன்
எதிர்பாத்து பார்த்த படம் ஒன்னு.
.தெரியாத்தனமா பாத்த படம் ஒன்னு ..

முதல எதிர்பார்த்து பார்த்த படம்..பத்தி சொல்றேன்
"அவதார் "
"அவதார் = பிரம்மாண்டம் " இப்படி கூட சொல்லலாம் . செம படம் .."நாவி"என்ற அந்த அற்புத கற்பனை உலகம் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது..
நடேரி அடிக்கடி என் கனவுல வர்றா (நாங்கலாம் யாரு சிங்கமுல..! பயப்புடமாட்டோம்..) மரங்கள்,காடுகள் நம்ம அழிசுற்றுக்க்ற இந்த நேரத்துல இயற்கைய கருவா வச்சு காதல..கவிதையா ப்ளன்ட் பண்ணினதுக்கு ..ஜேம்ஸ் கமரூன் அவர்களுக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள்.(
"ஐ சி யு"( "i see you " ) இந்த வருஷத்தின் மனசுல நிக்கக்கூடிய வசனமா இருக்கலாம்.படத்தை பற்றி விமர்சனம் என்னைவிட நல்லா பண்றவங்க இருக்காங்க..சோ நா அதா பண்ணல.(பண்ணத்தெரியாதுங்றதுக்கு எப்டிலாம் மேட்ச் பண்ண வேண்டிருக்கு ஹையோ..ஹயோ..!)

இப்ப நான் தெரியாத்தனமா பார்த்த படம் பத்தி சொல்றேன்..
வேட்டைக்காரன் .. சும்மா சூப்பர் காமெடிங்க படம் புல்லா ..காட்சிகள்ல காமெடி பண்ணது போதாதென்று பாட்லையும் வேற குடுமி போட்டு டெர்ரர் காமெடி பண்றார் நம்ம தளபதி ..சாரி நம்ம" இளைய தளபதி ".
பைட் பத்தி கட்டாயம் சொல்லியே ஆகணும்..நம்ம விஜய் கால கீழே வைக்றதே... கிடையாது சும்மா பறந்து..பறந்து அடி பின்றாரு ..(எப்டிதான் யோசிக்ராய்ங்களோ ? !) சன் டிவியால படத்த ஒட்டிருவாங்கனு நினைக்கேன்.
ஐயோ !சொல்ல .மறந்துட்டேன்..அனுஷ்கா ..அப்பப்ப படத்ல வந்து போறாங்க..வில்லங்க அப்பப்ப வந்து சைடுல காமெடி பண்றாங்க ..மொத்தத்ல படம் என்னோட 2 மணி நேரம் 40௦ நிமிஷத்த வேஸ்ட் பண்ணாலும் ..சிறந்த காமெடி பட விருதை தட்டி செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை ...

கொஞ்சம் சிரியஸ் பக்கத்துக்கு வருவோம்..
பிரணவ் மிஸ்ட்ரி பத்தி நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்லாம்..தெரியாதவங்களுக்காக ..அவர் பற்றி ..அமெரிக்காவில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு இந்திய மாணவர் பிரணவ் ,டிஜிட்டல் உலகிற்கும் நம் நடைமறை உலகிற்கும் ஒரு இணைப்பை எற்படுத்துவதைபற்றி(சிக்ஸ்த் சென்ஸ் டெக்னாலஜி ,ஆறாம் அறிவு தொழில்நுட்பம் ) ஆராய்ச்சி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் பிரணவ், இவரின் கூற்று படி..இவர் தாயாரிதிருக்கும் உபகரணங்கள் கொண்டு நம் வெறும் கையைக்கொண்டு நாம் நினைத்தவற்றை படம் பிடிக்கலாம்..புத்தகத்தை நகல் எடுக்கலாம் ..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பிரனவின் ஒரு அருமையான பேச்சு மற்றும் பிரனவின் கண்டுபிடிப்பு பற்றிய வீடியோ இணைப்பை இணைத்திருக்கிறேன் ..

சரி புரியுது..புரியுது..கிளம்பிடறேன்..
அடுத்த சந்திப்பு வரை ,
நான் தமிழன்

3 comments:

  1. //ஒரு வித்தியாசமான வாழ்த்து என்னை கன்னத்தில் ஓங்கி அடித்தது போன்றிருந்தது ..பார்ட்டிக்கு சென்றது தவறோ என்று//. INTHA VAZHTHU SEITHI MANATHAI URUKKUKIRATHU . Chuumma kalakiteenga tamizha..... nalla korvaiya ezhuthi irukeenga , vettaikaran vimarsanam super ..... pranav mistry pathi makkal ( naan than ) innum ethir paakuraanga ....

    adutha comment varai ...UNGALUL ORUTHI

    ReplyDelete
  2. Hi......பிரணவ் மிஸ்ட்ரி patri ippodhudhan kelvi padukiren.nandri

    ReplyDelete
  3. நன்றி தீபன் ,நன்றி ப்ரீத்தி

    ReplyDelete