Thursday, March 4, 2010

!அவனை வீழ்த்த வந்தவள் கதை !

அந்தி மயங்க மயங்க...
ஆர்ப்பரிக்கிரதவனுள்ளம்..அலைகடலாய் ..
அவள் வரவை எண்ணி.. எண்ணி....
அவனுக்கு அம்மா அவள் பின்னிக் கொடுத்த..
சால்வையைப் போர்த்தியபடி..
வானம் கரு நிற போர்வை அணிவதை ..
பார்த்தபடி காத்திருக்கிறான்..
அவள் வரவு வேண்டி ஆவலோடு..

வருபவள் தனியாக வராது மங்கை ஒருவளையும் கூட்டி வருவாள் ..
அவனுக்காக ..அனுதினமும்..
நடக்கிறது இக்கூத்து தொலைகாட்சி தொடர்கதையாய்...நில்லாமல்..

ஐயோ ..!
வந்துவிட்டாள் அவள் ..
அவனைக் கட்டிலில் வீழ்த்த..
.............
"என்ன இவன் மஞ்சள் கவிஞனா?"
நீங்கள் கேட்பது என் செவியில் விழுகிறது..

அவனைக் கட்டிலில் வீழ்த்த வந்தவள் பெயர் "தூக்கம் "
அவள் கூட்டி வந்த மங்கை அவளது பெயர் "கனவு"

6 comments:

  1. கனவு மஞ்சள் ஆக்கி மஞ்சம் புரிய செய்தமைக்கி கவி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உனக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் கற்பனை வருகிறதோ?நன்றாக இருக்கிறது.தொடரட்டும்.

    ReplyDelete