Tuesday, January 25, 2011

!லைட் போட்ட புண்ணியவான்....!

களைத்து வந்து...
 கண்கள் மூடி..
கனவில் விழுந்தேன்..
"காதல்" சுவைக்க.

அவள் பார்வை அம்புகள்..
இதயம் கிள்ள..
பார்த்து சிரித்தேன்..
பதில் சிரிப்பு..
சிரிப்பில் தவறி விழுந்தேன்..
மீண்டு வர..
மீண்டும் சிரிப்பு..
விரும்பி விழுந்தேன்..
திரும்பும் எண்ணமில்லை...

பாடினாள்.."குயில்" என்றேன்..
"கதை" என்றாள்...
"கவிதை" என்றேன்..
சிரித்து கண்ணிமைத்தாள் 
பேச்சற்று ..பார்த்தேன்..
 நின்றேன்..!

புருவங்கள் நடனம் ஆட..
பேசினாள்..
மயங்கினேன்..

திடீர் வெளிச்சம் ..
தூக்கம் கெடுக்க..
விழித்தெழுந்தேன்..
கலைந்தது  கனவு ..
இதயமும் கூட...

லைட் போட்ட புண்ணியவான்...
வாழ்க..!
வாழ்க..!

4 comments: