காதல் மொழி
அவள்
கண்கள் பேச ..!
நான்
கண் மூடி
கூந்தலலையில்
மூழ்கிய தருணங்கள்.
நான்
வைத்த முத்தங்கள் அவள்..
கன்னங்கள் நனைக்க..
அவள்
விழியால் சுட்டு .
என்
இதயம் உடைத்து ..
அள்ளிய நிமிடங்கள்.
அவள்
பேசி சிரித்து ..
அனைத்து தழுவிய
நேரங்கள்.
அவள்
கண்மை
கரைத்து வந்த ..
கருப்பு கண்ணீர்..
கையில் ஒட்டி...
உயிர் புகுந்து ..
வெடித்து ,,
இதயம் கொன்று ..
சென்ற தருணம்..
யாவும்
கூடி ..
மீண்டு வந்த என்னை ..
மீண்டும் மீண்டும் கொல்கின்றன..
இதயம் இல்லாது ..
இறைவா ..!
சிதறிய இதயம் ஒட்ட..
வலி தீர .
ஒரு வழி வேண்டும் ..
இறைவா..!
இதயம் கொண்ட இறைவா..!
really good one ... !! great job !!!
ReplyDeletepretty good
ReplyDeleteகூந்தலலையில்.....koonthal ah??
ReplyDeleteni
koonthal = ponungaloda thalai mudi..!
ReplyDelete