Monday, February 14, 2011

!"வெற்றி நமதே" !

தோல்விகள் துரத்தி..
அடித்து 
வெற்றி..வெற்றி..!
என்று கீழே தள்ளி..
முறைத்த..
பயந்து போய்..
அழுது..இறுகபிடித்தேன்..
தலையணையை..
கண்கள் மூடி ஜெயிக்கும் இடம் நோக்கி..
சென்றேன்..!


வெண்மை..! வெண்மை..!
யாவும் வெண்மை..!
என்ன இது?
"உள்ளம்", என்றது குரல்..!
"உள்ளம் ", வெள்ளை ?
விழித்தேன்..!
"இருத்தல் நன்று"
என்றது குரல்..!
குறிப்பெடுத்தேன்.

பக்கத்தில் படிக்கட்டுகள்..!
வானம் நோக்கி..
செல்ல..
ஏறினேன் ஆசையாக..!
வெற்றி..வெற்றி..!
கத்திக் கூப்பாடிட்டேன்..!
வெற்றி நோக்கி சென்றபடி..

"தோல்வி தோல்வி..!",குரல்.
என்ன?
"படிக்கட்டுகள்" என்றது குரல்.!
"ஓஹோ !"
என்று குறிப்பெடுத்தேன்.


போன இடத்தில் ..
மெத்தை ஒன்று கிடக்க..
போய் பாய்ந்தேன்..
குதூகலம்.!!

அங்கே ..!
கண்மை காமமிட்டு..
கருமை கூந்தலில் ..
வெள்ளை மல்லி சூடி..
மணக்க வந்தாள் ஒருத்தி..
அழகில் மயங்கிகிடக்க..
என்னை..
ஓடிவந்து தழுவிக்கொண்டாள்.!!!
தள்ளிவிட மனமில்லை 
தழுவட்டும் என்றிருந்தேன்..!

"யோ அசரீரி .!
யாரிவள்?" வினவினேன்.
"வெற்றி..!
வெற்றி..!",என்றது குரல்.!
சிரித்தபடி..

அள்ளி அணைத்தவள்..
திடீரென..
தள்ளிவிட்டு திரும்பாமல் செல்ல..
திடுக்கென்றது..
துரத்தி ஓடினேன்..!
"நிரந்தரமில்லை",குரல்.
"என்ன? ",நான் !
"வெற்றி ",குரல்.
குறிப்பெடுத்தேன் .கண்ணீர் துடைத்தபடி..
சிரித்தபடி.!
துரத்தி ஓடினேன்..
ஆயிரம் படிக்கட்டுகள்..தாண்டி..
அவளை மீண்டும் அனைக்க.

கண் விழித்தேன் !
எங்கும் "தோல்விகள்...!"
இல்லை "படிக்கட்டுகள்..!"
கட்டி அனைப்பேன் "அவளை" ஒருநாள்..!
இல்லை "வெற்றியை"..!
"வெற்றி எனதே" 
இல்லை 
"வெற்றி நமதே" 

2 comments:

  1. Awesome !! It suits me good anna !! :)

    //
    அள்ளி அணைத்தவள்..
    திடீரென..
    தள்ளிவிட்டு திரும்பாமல் செல்ல..
    திடுக்கென்றது..
    துரத்தி ஓடினேன்..!
    "நிரந்தரமில்லை",குரல்.
    "என்ன? ",நான் !
    "வெற்றி ",குரல்.
    குறிப்பெடுத்தேன் //

    I liked these lines !!

    ReplyDelete