Friday, February 18, 2011

வரம் தந்த அவளுக்கு..!

மனதின் வலிகள்..!
சிகப்பு மையாய்..
வலிந்து ஓட..
காகிதம் எங்கும் 
இரத்தம் ..!
இரத்தம்..!

சொட்டு சொட்டாய் ..
வடித்த கண்ணீர்..
காகிதம் நனைத்து..
இரத்தம் அழித்து..
சித்திரம் வரைந்து ..
வலிகள் போக்கி..
மாயம் செய்தது.
அழுகை..
வலிகள் போக்கும் வரம் !
வலிகள் உண்டோ  ?
அழு..!
கதறி அழு ..!
கோழையோ?
பயம் வேண்டாம் ..
பயமின்றி அழு..
பயபடுபவன் கோழை.!
கண்ணீர் மருந்து..
கொண்ட காயம்..
கரைய வேண்டும்..
ஆதல் 
அழு..!
கதறி அழு..!

அழுகை..
உலக மொழி..
குழந்தை மொழி..
யாரும் அறிவார்..
 கேளாமல் 
விடை தரும்..
உதவி வரும்..
ஆதல் 
அழு..!
கதறி அழு..!

அழுது முடித்து 
கண்கள் மூடு ..
சொக்கும் தூக்கம் ..
கனவு கூடும் ..
அங்கே காகிதம் தீரும் ..
வலிகள் 
கவிதையாய் பிறக்கும் ..
காயம் ஆறும் ..
இதயம் ஒட்டும்..
சக்தி பிறக்கும்..
ஆதல் 
அழு..!
கதறி அழு..!

அழுத...
மறுநாள் எழுந்தேன்..
வந்த யாவும் உண்மை..
உணர்ந்தேன்..
காகிதம் தீர்கிறது..
இடை இடையே 
சொட்டுக் கண்ணீர்கள்..
முற்றுபுள்ளிகளாய்.
தீர்ந்தது கண்ணீர் .
சிரித்தேன்..
வலிகள் இல்லை..
அழுகை  பிடிக்கிறது...
வரம் தந்த அவளுக்கு..
நன்றி.. !
நன்றி..!

2 comments:

  1. அழுகை..
    உலக மொழி..
    குழந்தை மொழி..
    யாரும் அறிவார்..
    கேளாமல்
    விடை தரும்..
    உதவி வரும்..
    ஆதல்
    அழு..!
    கதறி அழு..!... super lines....:)

    ReplyDelete