அடங்கா எண்ணங்கள்..
அலையென திரண்டு..
உயிர் புகுந்தன..
இதயம் தட்டி..
"கேள்..கேள்",என்றன
என்னுள் நேற்றிரவு..
தூக்கத்தை பொருட்படுத்தாது..
மூளையை தட்டினேன்.
தூக்கம் தெளிந்தவனாய்..
"என்ன", என்றது..
தலையை சொறிந்தபடி சொன்னேன்..
"காதல் கவிதை ஒன்று வேண்டுமென்று."
இந்தா பிடி என்று..
காதினுள் ஓதியது..
"காதல்
காலுண்டு இவ்வார்த்தைக்கு..
கண்களில்லை..
இவ்விலக்கியத்தில்
முத்தங்களே இலக்கணங்கள்..
சிலசமயம் வேறுபடும்..
அங்கே ..
இலக்கணங்கள் உடைபடும்..
காதல்
வயதுகளை மறக்க செய்யும்..
குழந்தை ஆக்கும் .
சிரிக்க வைக்கும்..
கண்களை பேச செய்யும்..
இதய மொழி புரிய வைக்கும்..
அழ வைக்கும்..
காதல்..
தூக்கம் வராமற் செய்யும்..
வந்தாலும்..
அவளை கனவில்
வர செய்யும்..
முத்தங்கள் தர செய்யும்..
கனவைக் கவிதை ஆக்கும்..
வாழ்வை இனிப்பாக்கும்..
மொத்த இலக்கியங்கள்..
முத்த இலக்கணங்கள்..
கவிதைக் கனவுகள்..
அவளின் முத்தங்கள்..
யாவும் வேண்டுமெனில்..!
செய்வீர் காதல்!
செய்வீர் காதல்.!"
சொல்லி தூங்கின மூளைகள்..
எழுந்த அலைகள்.
அமைதியாய் அடங்க..
கவிதைக்குள் கவிதை செய்தேன்..
அதை பதிவு செய்தேன்..
காதலுடன்..!
lik vairamuthu style.......gud
ReplyDeletekaathal seiveer apdingra thalaipula vairamuthu eluthina kavithai inspiration
ReplyDelete