Sunday, July 11, 2010

!அம்மூவரும் நான் பெற்ற தண்டனையும் !

பச்சைப் பட்டுடுத்தி எழுந்து நின்று 
அருவியாய்க்கொட்டி கீதம் பொழிந்தாள் ..
மலையவள் ..
அவளது அழகில் மயங்கி நான்.. 
சிற்றின்பத்தில் லயித்திருக்க...

தவழ்ந்து வந்து என்னை வருடிவிட்டு ..
பேரின்பத்திற்கே..! என்னை பதவியேற்றம் செய்தாள்..
தென்றல் அவள்..

சில்லென்ற சாரலாம் மூன்றாமவள் ..
வந்து என்னை மது உண்ட தேனியாய் ..
மாற்றிவிட்டாள்..
என்னை சொக்கவைத்தாள்...
மாயவலையில் சிக்கவைத்தாள்...

"பேராசை பிசாசு..!" என்னை பிடித்து வைக்க..
அடுத்தவள் வரவிற்காய் 
காத்து நின்றேன் ..
கண் பூத்து நின்றேன்....
பேரிடியாய் என் இதயத்தில் விழுந்தது...
சுரீரென்று.. சுட்ட வெயில்!..
அம்மூவரின் "தகப்பன்" என்று மனதில் சிரித்து 
அசையாமல் நின்றேன்..

அழைப்பு மணி.. அடித்து..! என்னை எழுப்ப ..
சே! என்று எழுந்தேன்..
 சூரியன் வெளியே சுட்டெரித்துக் கொண்டிருந்தார்..!
"கனவிற்காக நிஜத்திலும் தண்டனையா?",
என்று சிரித்தபடி..
புறப்பட்டேன்..
தண்டனையை பெறுவதற்கு..!

Sunday, July 4, 2010

!காதலித்துப் பார் ..!

காதலித்துப் பார் ..!
இருளை ரசிக்கச் செய்யும்..
அமாவாசையும் அழகாய் தெரியும்..
வருடங்கள் நிமிடமாகும் ..
நிமிடங்கள் வருடமாகும்..
காதலித்துப் பார்..
புதிது புதிதாய் பொய் சொல்ல வேண்டுமா?
தனிமையில் சிரிக்க வேண்டுமா?
கவிகள் பல புனைய வேண்டுமா?
காதலித்துப் பார்..
நண்பர்கள் தெய்வமாய் தெரிவர்..
காதலியின் அப்பாக் கூட வில்லனாய்க் காட்சி தருவார்..
காதல் புரட்சி செய்யும்..
இருவது வருட உறவையும் இரு நிமிடங்களில் ..
உடைக்கச் செய்யும் ..
காதலித்துப் பார்..

காதல் 
ஈருயிரை இணையச் செய்யும்..
ஈருடல் ஓருயிரான விந்தையை உணரச் செய்யும்..

கல்லூரியில் காதல்  ஒரு விஷ பரிட்சை 
அது தேவதைகளுக்கு வேலைவாய்ப்பும் ..
தேவதாஸ்களுக்கு அரியர்ஸ் பேப்பரையும் 
பரிசாய்த் தரும்..

காதல் 
ஆர்மோன்களின் திருவிளையாடல் ..
காதல் 
இன்ப வெள்ளத்தை பெருக்கெடுக்கச் செய்யும்..
கூடாக் காதல் ..
கண்களிலும் கூட வெள்ளப்  பெருக்கெடுக்கச் செய்யும் ..
காதல் 
ஒரு புரியா புதிர்..
விடை காண வேண்டுமா ?
நீயும் கவி பாட வேண்டுமா?
காதலித்துப் பார்..!

Saturday, April 24, 2010

!அது ஒரு மழைக்காலம்.!

அது ஒரு மழைக்காலம்..
என் தோட்டத்து ரோஜாவின் இதழ்களில்..
முத்தமிட்டு கொண்டிருந்தன மழைத்துளிகள்..
சில்லிட்டு பூத்திருந்தால் என் தோட்டத்து ஒற்றை ரோஜா..

வெளியே கொட்டும் மழை..
அப்பொழுது ஒரு வெள்ளை ரோஜா..
நடக்கும் சக்தி கொண்ட அற்புத ரோஜா..
நான் பார்த்ததிலேயே அழகிய ரோஜா..

இறைவனிடம் அழகு கொடை பெற்று..
குடை கொண்டு நடந்து வந்தாள்...
அவள் என்ற அந்த பெயர்தெரியா ரோஜா..
தன்னை முத்தமிட வந்த மழைத்துளிகளைக்..
குடை கொண்டு தடுத்தபடி நடந்தாள் ..
சோ!! என்று அழுதபடி குடையிலிருந்து தெறித்துத்
தற்கொலை செய்தன.மழைத்துழிகள்
தோல்வியைத் தாங்காது
அவளைத் தொட்டவை சில அங்கேயே..
மோட்சம் பெற்றன..பாவம்!
என் கண்ணிலிருந்து..மறையும் வரை..
பார்த்தேன் ..அவளை கண்ணிமைக்காது..
என் அரும்பு மீசையை தடவியபடி..

பெயர் தெரியா அரோஜாவின்..நினைவில் ..
இருந்து எழவில்லை பல மணி நேரத்திற்கு

மழை வெறித்தது..
பிரியா விடை பெற்றன என் தோட்டத்து
ரோஜாவின் மழைத்துழிகள்..
அன்று என் தோட்டத்தில் புதிதாய் ஒரு மொட்டு..
பூத்திருந்தது..
என் இதயத்திலும் கூட..புதிதாய் ஒன்று...

பசுமையாய் என் நினைவில் இன்றும் உண்டு..
அந்த பத்து நிமிட முதல் காதல்..
இன்று வரை நான் மீண்டும் காணாத அந்த வெள்ளை ரோஜா..
அது ஒரு அழகிய மழைக்காலம்..


Saturday, April 10, 2010

!அவ்வேழு மணி நேரக் கனா.!

கண்களாலே கவி பாடி ..
எனைத் தாண்டி நீ சென்றாய்..
அன்று முதல் தேடுகிறேன்...
என் இதயத்தைத் தொலைத்துவிட்டு..


அன்பே !
களவாடிய என் இதயம் வேண்டாம்..
காதலோடு உன் இதயம் வேண்டும்...
தருவாயோ..?

உனைக் கண்ட நாள் முதலே
கனாக் காங்கிறேனடி தோழி..
நம் எதிர்காலம் பற்றி..
அவ்வேழு மணி நேரக் கனாக் காண..
பதிநேழுமணி நேர தவம் யுகங்களாய்..
கழிவதேனோ?

ஏழு மணி நேரம் கனா..
கனா முழுதும்..
நீ..
கவிதை..
நம் காதல்..
ஊடல்..
திகட்டா..முத்தம்..
குழந்தையின் சங்கீதம்..
நேற்றைய கனாக் கவி வரி
இன்னும் என் நினைவில் உண்டு..
"மண் தின்னும் நாள் வரையிலும்
சேர்ந்திருப்பேன் உன்னோடு இதே காதலோடு.."
பகல் கனவு அல்லவே...ஆதல் .
கனா மெய்ப்பட வேண்டும் தோழி..
நிஜத்திலே..
மண் தின்னும் வரையில் சேர்ந்திருக்க
அனுமதிப்பாயோ?..
உன் மடியில் நான் உயிர் விட..
வரம் தருவாயோ?
என் காதலை
ஏற்பாயோ?..
ஏற்பாயோ?

கூவியது அலாரம்..
கண் விழித்தேன்..
சே!
கனா..
கனாவிலே கவிதை..
கவிதையிலே கனா..
நிஜத்திலே காணாக் காதலை..பற்றி..
கனா..
கனாவிலே கவிதை..
கவிதையிலே கனா..
சிரிப்பு வந்தது..
எனக்கு

Friday, March 26, 2010

பைத்தியத்தின் கடிதம்

ன்பே ..!
சையில் உன்னை அணைத்தது ..
தழில் இதழ் புதைத்தது ..
ரக்கூந்தலில் நீ முகத்தி அறைந்தது..
ன் சிரிப்பில் எனைத் தொலைத்தது...
தி நான் அணைத்த விளக்கு கண்டு..வெட்கத்தை அள்ளி நீ பூசியது..

ட்டா உயரத்தையும் எட்டிபிடிக்க நீ உதவியது .
எல்லாம் என் மனதில் உண்டு என்னுயிரே அழியாது இன்றுவரை..

ற்றிவிட்ட..ஏணியே எங்கே நீ?
ரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றுவிட்டாய் மீளாத்துயில்கொள்ள..
யாது வேண்டுகிறேன்
வையை போல் ஐயன் முருகனிடம் ..
நீ மீண்டும் வர வேண்டும் என்று..
மக்களிடம் பைத்திய பட்டம் பெற்று ..

இப்படிக்கு,
பைத்தியம் (மக்களை பொறுத்தவரை) எனப்படும் உன் காதலன்

Thursday, March 4, 2010

!அவனை வீழ்த்த வந்தவள் கதை !

அந்தி மயங்க மயங்க...
ஆர்ப்பரிக்கிரதவனுள்ளம்..அலைகடலாய் ..
அவள் வரவை எண்ணி.. எண்ணி....
அவனுக்கு அம்மா அவள் பின்னிக் கொடுத்த..
சால்வையைப் போர்த்தியபடி..
வானம் கரு நிற போர்வை அணிவதை ..
பார்த்தபடி காத்திருக்கிறான்..
அவள் வரவு வேண்டி ஆவலோடு..

வருபவள் தனியாக வராது மங்கை ஒருவளையும் கூட்டி வருவாள் ..
அவனுக்காக ..அனுதினமும்..
நடக்கிறது இக்கூத்து தொலைகாட்சி தொடர்கதையாய்...நில்லாமல்..

ஐயோ ..!
வந்துவிட்டாள் அவள் ..
அவனைக் கட்டிலில் வீழ்த்த..
.............
"என்ன இவன் மஞ்சள் கவிஞனா?"
நீங்கள் கேட்பது என் செவியில் விழுகிறது..

அவனைக் கட்டிலில் வீழ்த்த வந்தவள் பெயர் "தூக்கம் "
அவள் கூட்டி வந்த மங்கை அவளது பெயர் "கனவு"