Sunday, July 11, 2010

!அம்மூவரும் நான் பெற்ற தண்டனையும் !

பச்சைப் பட்டுடுத்தி எழுந்து நின்று 
அருவியாய்க்கொட்டி கீதம் பொழிந்தாள் ..
மலையவள் ..
அவளது அழகில் மயங்கி நான்.. 
சிற்றின்பத்தில் லயித்திருக்க...

தவழ்ந்து வந்து என்னை வருடிவிட்டு ..
பேரின்பத்திற்கே..! என்னை பதவியேற்றம் செய்தாள்..
தென்றல் அவள்..

சில்லென்ற சாரலாம் மூன்றாமவள் ..
வந்து என்னை மது உண்ட தேனியாய் ..
மாற்றிவிட்டாள்..
என்னை சொக்கவைத்தாள்...
மாயவலையில் சிக்கவைத்தாள்...

"பேராசை பிசாசு..!" என்னை பிடித்து வைக்க..
அடுத்தவள் வரவிற்காய் 
காத்து நின்றேன் ..
கண் பூத்து நின்றேன்....
பேரிடியாய் என் இதயத்தில் விழுந்தது...
சுரீரென்று.. சுட்ட வெயில்!..
அம்மூவரின் "தகப்பன்" என்று மனதில் சிரித்து 
அசையாமல் நின்றேன்..

அழைப்பு மணி.. அடித்து..! என்னை எழுப்ப ..
சே! என்று எழுந்தேன்..
 சூரியன் வெளியே சுட்டெரித்துக் கொண்டிருந்தார்..!
"கனவிற்காக நிஜத்திலும் தண்டனையா?",
என்று சிரித்தபடி..
புறப்பட்டேன்..
தண்டனையை பெறுவதற்கு..!

2 comments:

  1. கனவின் நிஜம்..எதார்த்தம்..

    ReplyDelete
  2. ஊக்கத்திற்கும் வருகைக்கும் நன்றி அண்ணா..!

    ReplyDelete