Sunday, July 4, 2010

!காதலித்துப் பார் ..!

காதலித்துப் பார் ..!
இருளை ரசிக்கச் செய்யும்..
அமாவாசையும் அழகாய் தெரியும்..
வருடங்கள் நிமிடமாகும் ..
நிமிடங்கள் வருடமாகும்..
காதலித்துப் பார்..
புதிது புதிதாய் பொய் சொல்ல வேண்டுமா?
தனிமையில் சிரிக்க வேண்டுமா?
கவிகள் பல புனைய வேண்டுமா?
காதலித்துப் பார்..
நண்பர்கள் தெய்வமாய் தெரிவர்..
காதலியின் அப்பாக் கூட வில்லனாய்க் காட்சி தருவார்..
காதல் புரட்சி செய்யும்..
இருவது வருட உறவையும் இரு நிமிடங்களில் ..
உடைக்கச் செய்யும் ..
காதலித்துப் பார்..

காதல் 
ஈருயிரை இணையச் செய்யும்..
ஈருடல் ஓருயிரான விந்தையை உணரச் செய்யும்..

கல்லூரியில் காதல்  ஒரு விஷ பரிட்சை 
அது தேவதைகளுக்கு வேலைவாய்ப்பும் ..
தேவதாஸ்களுக்கு அரியர்ஸ் பேப்பரையும் 
பரிசாய்த் தரும்..

காதல் 
ஆர்மோன்களின் திருவிளையாடல் ..
காதல் 
இன்ப வெள்ளத்தை பெருக்கெடுக்கச் செய்யும்..
கூடாக் காதல் ..
கண்களிலும் கூட வெள்ளப்  பெருக்கெடுக்கச் செய்யும் ..
காதல் 
ஒரு புரியா புதிர்..
விடை காண வேண்டுமா ?
நீயும் கவி பாட வேண்டுமா?
காதலித்துப் பார்..!

2 comments: