Friday, August 21, 2009

!!!இதோ இந்த வார கிறுக்கல்!!!


நான் தொலைநோக்கன் !
நீ தொலைநோக்கியாய் இருப்பாய்
என்பதை ஞான் அறிவேன்...
நம் எதிர்காலத்தை தொலைநோக்க
இந்நிகழ்காலத்தில் முயல்வோமே!
என்னுயிர் தொலைநோக்கியே !!

அழகாய் வீடு
அருகே தோட்டம்
மிக அருகே மிக அழகாய் நீ !!
அந்நகர நரக வாழ்க்கை !
உன்னால் நகர சொர்க்கமாகுமே !!

ஒவ்வொரு வெள்ளியும் "நிலாச்சோறு "
உண்டு ," மறவாதே! " , வெண்மதியே !
முதல் வெள்ளியன்று உன்
செவியில் மிக மெலிதாய் சொல்வேன்
கவிப்பேரரசின் கவிதை வரிக் கவர்ந்து

"!உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே! "
அந்நிசியில் உன் வெட்கம் காண
வேண்டுமே கண்கள் கோடி !

"திகட்டுகிறது" என்றெண்ணம்
என் மதியில் "உதிக்கிறது "!
தற்சமயம் இத்தொலைநோக்கு ...
மிக அதிகம்
என நினைப்போர் நிலை அறிந்து
இத்தோடு முடிக்கிறேன்
மிச்சத்தை நேரிலே சேர்ந்தே
நோக்குவோம் ...
என்னுயிர் தொலைநோக்கியே!!
இப்படிக்கு,
தொலைநோக்கன் (நான் தமிழன்).

No comments:

Post a Comment