Sunday, August 16, 2009

!!நான் படித்ததில் பிடித்தது !! "பாரதியார் கவிதை"

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக்
கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?


நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவைநேரே
இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும்
இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங்
கவலையறச் செய்து - மதிதன்னை
மிகத் தெளிவு செய்து - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

No comments:

Post a Comment