ஏன் படைத்தாய் என்னை ?உண்ண உணவில்லை... உடுத்த உடையில்லை...இருக்க இடமில்லை... என்னவென்று கேட்க நாதியுமில்லை... இறைவா ஏன் படைத்தாய் என்னை ??
பரட்டைத்தலை, சிறுத்த உடம்பு ஈக்கள் மொய்க்க தெருவோரம் வெற்றுடம்புடன் கிடக்கிறேன் அநாதையாய் நான் உங்கள் மொழியில் என் பெயர் "பிச்சைக்காரன்"
"அரிசிச்சோறு", பார்க்கவில்லை பலநாளாய் நின்று கொண்டிருக்கிறேன் நாயுடன் போட்டிபோட்டு குப்பைத்தொட்டியினருகில், இன்று
அஹா!! இன்று என் பல நாள் கனவு ஈடேறும் நாள் கல்யாண சாப்பாடு இன்று
நான் பிச்சைக்காரன் காரணம் இரண்டே எழுத்து
"பசி"!"பசி"!"பசி"!
என் "உயிர்" என்னும் "மூன்றெழுத்தை" சாப்பிட்டிருக்கும்..."இவ்விரண்டழுத்து" நான் பாத்திரம் கையில் ஏந்தவில்லை என்றால்
ஏநதிவிட்டேன் கையில் கீழே வைக்க முடிய வில்லை இன்றுவரை
ஏங்குகிறேன் இறைவா!
எனக்கு மாளிகை வேண்டாம் குடிசையில் சுகமாய் வாழ்வேன் அறுசுவை உணவு வேண்டாம் மூவேளை கஞ்சி போதும் உயிர் வாழ
நான் பட்டாடை கேட்க்கவில்லை மானம் மறைக்க துணி கேட்கிறேன் உனக்கு மானமே இல்லையே!! என்று துணி கூட கொடுக்க மறுக்கிறாயே ??கேட்டதெல்லாம் கொடுக்காது உன்னிடம் கேட்காத அடி உதைகளை மட்டுமே தருகிறாயே??
இறைவா!! உன் காதுகளுக்கு "நல்ல மருத்துவம்"தேவை, இப்பொழுது ஒன்றே ஒன்று கேட்கிறேன்
தவறாது தயவுகூர்ந்து என் ஆசையை நிறைவேற்று என் உயிரை எடுத்துச்செல் தயவுகூர்ந்து எடுத்துக்கொள் நிறைவேற்றுவாய் என்ற எதிர்பார்ப்புடன்
--பிச்சைக்காரன்
is this really written by you....i can't believe...what a talent
ReplyDeleteAwesome kavidhai brother !!!!
ReplyDeleteNija vazhvil pichaikaran unarkiraano illayo ...migavum unnarchi poorvamaaga ulladhu
!!நன்றி!!
ReplyDeletehey broth its awesome!!!!
ReplyDeletei cant believe this type of talents u have.....
really cool....
thnx da!!
ReplyDeletereally superb da.....
ReplyDeletethnk u vry much....
ReplyDelete