என்று தீருமடா உன் பசி ??
என்று தீருமடா உன் பசி ??
சொல்ல வேண்டும் நிச்சயம் !!
மகிந்தா என்று தீருமடா உன் பசி??
கிழவன் கிழவி
ஆத்தாள் அப்பன்
சிறுவன் சிறுமி
குறைவின்றி கொல்கிறாய்
இன்னும் அடங்க வில்லையா உன் வெறி ??
சொல்ல வேண்டும் நிச்சயம் மகிந்தா என்று தீருமடா உன் பசி??
ஓ!! தமிழர் குருதியின் நிறத்தில்
சந்தேகமோ உனக்கு??
துளைத்துப் பார்க்கிறாய்
கொத்துக் குண்டுகளால்!!
சொல்ல வேண்டும் நிச்சயம்!!
மகிந்தா என்று தீருமடா உன் பசி ??
குருதிக் கடலில் மூழ்குகின்றனர்
என்னுயிர்கள் வன்னியில் !!!
மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறாய்
நீ கொழும்பில்
என்னடா நியாயம் ??
சொல்ல வேண்டும் நிச்சயம்
மகிந்தா என்று தீருமடா உன் பசி??
!!இரத்தம் இரத்தம்!!
இரத்தம்!! இரத்தம்!!
ஐயகோ!! இரத்தம் !!
கதறுகிறாள் என் சகோதரி
பிணக்குவியலின் நடுவே
தன் உயிரற்ற மகனின்
சடலத்தைக் கையிலேந்தி
இறைவா மன்னித்துவிடு
நான் இன்று முதல் நாத்திகன்!!
No comments:
Post a Comment