என்னுயிரே..என் காதலியே..
இன்றும் வாழ்கிறேன்
உன் நினைவால் பிணமாக...
கண்ணே!! எத்தனை மாற்றங்கள் ??
இப்பொழுது என் தலைமுடியின் நிறம் வெள்ளை
ஆனால் உன் நினைவுகள் இன்றும் வாழ்கிறது என்னுள்ளே அதே பசுமை மாறாது
காலம், இல்லை, அரக்கன்!!
அன்பே!! உன்னை என்னிடமிருந்து பிரித்து விட்டான்
உன் நினைவுகளை பிரிப்பதில் தோல்வியுற்றான்
வெற்றிக் களிப்பில் இன்றும் சிரிக்கிறேன் நான் ஏளனத்தோடு அவனைக்கண்டு...
என்னுயிரை மாய்க்கவில்லை நான் அன்பே!
என்னுள் வாழும் உன்னைக் கொல்லத்
திராணியில்லை எனக்கு!!
ஆருயிரே நீ இவ்வுலகை விட்டு மறைந்திருக்கலாம்
வாழ்கிறாய் என் இதயத்தில் இன்றும்
வாழ்வாய் என்னுயிர் பிரியும் வரை....
இப்படிக்கு,
ஆருயிர்க்காதலன்
wonderful love poem ,.,.,. touching !!! good work da ,.,. !!!
ReplyDeleteநன்றி
ReplyDelete