Sunday, November 27, 2011

என் காதலியே...

மனதில் பிறந்து ..
மூளையில் வளர்ந்து ..
பேனாவில் இறங்கி ..
கவிதைகளாய் இறக்கிறது என் காதல் ..
மீண்டும் அவளை பார்க்க..
மறுபிறவி கொள்கிறது மனதில் கனவோடு..
மீண்டும் இறக்க..
சொல்லாமல் சேர்த்த காதல் ..
மனதை கனமாக்கி..
கண்ணீராய் முட்டி நின்று ..
தனிமையில் அழ செய்கிறது ..
இறுதியில் கவிதைகளாய் செத்து விழுகிறது ..
 தோல்வி உறுதியாயினும் , வேண்டும்..
என் காதல் கங்கை வற்றும் முன்...
வந்து விடு 
என் காதலியே...

Monday, October 31, 2011

வாழ்க வாழ்க ..!

தெளியா மயக்கம் 
தலை சுற்றி நான் உளற
தலை சாய்த்தேன்..
எல்லாம் புரிந்தவளாய் 
சிரித்தாள் ..காதல் பேசினாள்..
முத்தம் கேட்க ...
வைத்தாள் கன்னத்தில் ..
கட்டி நிற்க கடிந்த சொல் இல்லை..
முத்தம் முத்தம்..
 முத்தம் மட்டுமே !
"ஏன் இவ்வளவு அழகு ?"
நான் கேட்க ..பதில் இல்லை..
"புன்னகை மட்டும் "
வேறென்ன செய்ய ..
வைத்தேன் முத்தம் பரிசாய்..",
போதை காட்சி இது ..
எல்லாப் புகழும் போதைக்கே 

சிலருக்கு "காதல் = போதை "
இல்லாதோர்,இழந்தோர்க்கு "போதையே காதல் "
"போதை=விஷம் .."
காதல் செய்யாதோர் செய்துதொலைத்தோர் , விஷம் என்பர் காதலை ..
ஆதல் ..
காதல் = போதை .எனலாம் 
போதை ஒழிய வேண்டும்..
காதல்.....??
தவறு.. தவறு ...
கவிதைகள் பிறக்க வேண்டும்..
காதல் போதை வாழ்க வாழ்க !
காதல் வாழ்க !
போதை அவள் வாழ்க !
வாழ்க வாழ்க ..!

Thursday, July 21, 2011

பேனாவும் பெண்பாலோ?

கண்ணீர் மல்கி      
கவிதை  தீட்ட 
மை தீர்ந்தது.. 
பேனா  உதறினேன் ..
"அவள்  என்னை  
உதறி  அறைந்தது"  
கண்ணில்  தெரிய ..
தெரித்தது மை..
என்  உயிர் தெரித்தாற்போல்  ..
கிறுக்கி  எழுத  முயல ..
தாள் கிழித்தது ..
என் அருமை  பேனா!
அவள் என் இதயம்  கிழித்தாற்போல் ..!
பேனாவும்  பெண்பாலோ? 

Tuesday, June 21, 2011

!"கனவே என் காதலி "!


காணாமல் போய்..
கலங்கி நிற்க ..
கைகள் நீட்டி ..
காத்துதவுவாள்..
என்  "அவள் "

காலத்தில் கரைந்து ..
கண்ணீரால் அழிக்கப்படும் ..
சில காதல் ..
கனவில் உயிர் பெறும்   பல ..  
ஆனால்
"கனவே என் காதலி "

காலம் கணக்கில்லை ..
பகலும் அவளுடன்..
இரவும் அவளுடன் ..
தெரியாதென்று நினைத்தேன் ..
அப்பா சொன்னார், ..
"பகல் கனவு காணாதே "
என் காதல் வீட்டிற்க்கும் தெரிந்ததுதான் ..
எதிர்ப்பில்லை ..
என் அப்பா நல்லவர் ..!
அம்மாவும் கூட..!

"கனவே என் காதலி "
கலையாத கனவு 
கட்டி பின்னிய 
பெண்கள் சடை  போல ..
"அழகு அவள் " !
வர்ணங்கள் கொண்டவள் ..
என்னை புரிந்தவள் ..
புரிந்தவளிடம் ..
உன்னை தொலைத்து ..
தொலைந்த பின்  தேடு..
கனவில் தொலைந்தேன் ..
தேடினேன் ..

கனவே என் காதலி ..
கதை கத்தை கத்தையாய்..
கவிதைகள் காதலுடன்..
கதையாய் கவிதை கத்தை கத்தையாய் ..
எல்லாம் எழுதலாம்..
என் அவள் பற்றி ..
கனவே என் காதலி ..
"என் காதலே கனவு .."

Tuesday, May 17, 2011

!என்ன செய்யப்போகிறாளோ ? !


கை பிடித்து சேர்ந்து நடந்து 
கால் வலிக்க,
கரையோரம் உட்கார்ந்தோம் .
அவள் ஏதோ பேசினாள்..
அழகால்  கொன்றாள்..
செத்து ரசித்தேன் ..
"அவள் அழகு.."

அவள் கூந்தல் கடலில் ...
மூழ்கி இறக்கலாம் ..
"அவள் அழகு" ..

தலை சாய்த்து என்னவென்றாள்..
தலை சுற்றியது அழகு ..
"அவள் அழகு" ..

கொட்டிகிடக்கும் அழகில் 
பூத்துக்குலுங்கும் 
அவள் சிரிப்பு..அழகு 
"அவள் அழகு" 

மனதில் பிறந்த கவிதை அடக்கி 
சிரித்தேன் என்னவென்றாள் ...சிரித்தபடி 
சிரிப்பால் பதில் சொன்னேன் வார்த்த்தைஇன்றி..
புரிந்தவளாய் சிரித்தாள் ..
பார்த்துக்கொண்டே  இருந்தோம் ..
சேர்ந்தே கொன்றோம்  காலத்தை..

சூரியன்  கடலில் மறைய 
அவள் அழகு கூடியதாய் என் கண்கள் பார்த்தது..
இடைவெளி குறைத்து 
அலுங்காமல் அவளை அனைக்க முயல ..
முறைத்தாள்..
அழகு ..கொள்ளை அழகு 
அவள் ..

முறைத்தால் என்ன ..
முத்தம் வைத்தேன் கைபடாமல் கன்னத்தில் ..
கசங்காத ரோஜா, சிவந்த உதடுகள் ..
கண்களில்   பட
அங்கேயும் ஒன்று
 தந்து  விட்டு 
நான்  மெதுவாய் ஓட  
சிரித்தபடி  என்னைத் துரத்தினாள்..
ஓடினேன் ..ஓடினேன்..
எழுந்துவிட்டேன்...
நாளை கனவில் ..
என்ன செய்யப்போகிறாளோ ?

Wednesday, April 20, 2011

!நாம் என்ற சொல்லில் நான் உண்டு !

"நாம்" என்ற சொல்லில் 
"நான்" உண்டு ஆதல் 
நாம் விடுத்து ..
நான் எடுத்தேன் தப்பிக்க..

நான் நடிகன் 
படத்திலல்ல.
கை விரல்கள் தேயும் 
என் வேடங்கள்
எண்ணி எண்ணி..
ஆதல் எண்ணுவதில்லை..

"காதல் செய்ய 
சிரிக்க, அழ 
புண்படுத்த கோழையாகி..
குழந்தை தூக்க அம்மாவாக ..
மனைவியிடம் குழந்தையாகி..
போட்ட வேடங்கள் எத்தனையோ..!!
பின்னிரு வேடங்கள் தந்தது 
சந்தோசமே ..!
மற்றவை கேள்விக்குறி..!

நானும் உண்மையாயிருந்தேன் ..
நடிப்பின்றி நானாயிருந்தேன்..
"திறமையில்லை ..ஒன்றுமில்லை .."
நாம் சொன்னவை ...
நான் அப்போது நாம் இல் இல்லை ..!

இப்போது நான் 
நடிகன்
 மகா நடிகன் ..
நான் இப்போது நல்லவன் 
திறமையுள்ளவன் ..
நடித்தலே நலம் ..
இல்லை நாயினும் கீழே போவாய் ..
நாம் வகுத்த விதி அது ..

நான் கதை  கவி வரைவேன்  கனவில்..
கனவில் மட்டுமே..
கனவு கலைந்ததும்..
வேடம் ..வேடம்..

"வாழ்வு மாயமில்லை ..
வாழ்வே வேடம் இந்த வாழ்வே வேடம் .."
சிரித்து பாடி மூளை 
எழுத சொன்னது ..
"இயல்பாக நடி 
வாழ்க்கை - வெற்றி "
உண்மையோ ?
நான் நடிக்கிறேன் ..
எழுதுவதாய் நடிக்கிறேன் 
பிடித்ததுபோல் 
யாவரும் நடிக்க வேண்டுகிறேன்..

நாம் என்ற சொல்லில் 
நான் இப்போது உண்டு 
ஆதல் நாம் விடுத்து 
நான் எடுத்தேன் தப்பிக்க..

Monday, April 18, 2011

!"என்னடா இது ? இது கவிதையா?" !

நீண்ட இரவில்..
தூக்கமின்றி புரண்டு படுத்தேன் 
கண்கள் மூடி 
தூக்கத்தை அழைத்தேன் 
அணைக்க..
புதுபெண்ணாக  வரமறுத்தாள்
புரண்டேன்..
சே ! என்று கண் விழித்தேன்
அவளைக் கடிந்தவாறு ..


எதிரே 
மலைமுகட்டை முத்தமிட்டுக் கொண்டே ..
எழுந்தான் சூரியன் 
பொறாமை தீ என்னுள் பற்றியது ..
திரும்ப கண்மூடி கெஞ்சினேன் ..
வரமறுத்தாள்..
எழுந்துவிட்டேன் கோபம் கொண்டு .



ஜன்னலருகே போய் நின்று 
அவர்களின் காதலை 
ரசித்தேன் ..சிரித்தேன் ..
திடீரென என கைகள் பேனா 
தேடி காகிதம் கிழித்து 
எழுதியது..
எதைப்பற்றியோ?
நான் எழுதுவதாகக் கூட 
இருக்கலாம்..

"போட்டி போடாதே 
போட்டியிட்டாலே ..
தோல்வி பயம் 
வெற்றி யாது ?
உன் வெற்றி அவன் தோல்வி ..
அவன் வெற்றி உன் தோல்வி ..
யாவரும் வெற்றி பெற 
போட்டி கூடாது..
புறந்தள்ள வேண்டும்.. 
கொலைசெய்ய வேண்டும்..
தப்பாக சொல்லிவிட்டேனோ?
தவறான கருத்தோ ??
போட்டி போடு ..
வெற்றி பெறு..உன் இஷ்டம்
 என்னடா இது ??
இது கவிதையா??"


எழுதிவிட்டு கை உதறினேன் ..
சூரியனின் முத்தத்திற்காக 
ஏங்கி காத்திருக்கிறாள் மலைமுகடு ..
மாலைவரை தானே   இருக்கட்டும் ..
என்னடா இது ?
இது கவிதையா ?
மறுபடி அவளே என்னை அழைத்தாள்..
சூரியனைப் பார்த்து 
ஏளனச் சிரிப்பு சிரித்து ..
அவளை அணைத்தேன் 
கண்கள் மூடினேன் 
"தூக்கம்" என்னை ஆட்கொண்டுவிட்டாள்..

"என்னடா இது ?
இது கவிதையா?"
என்னை நான் கேட்டது ..