Tuesday, June 21, 2011

!"கனவே என் காதலி "!


காணாமல் போய்..
கலங்கி நிற்க ..
கைகள் நீட்டி ..
காத்துதவுவாள்..
என்  "அவள் "

காலத்தில் கரைந்து ..
கண்ணீரால் அழிக்கப்படும் ..
சில காதல் ..
கனவில் உயிர் பெறும்   பல ..  
ஆனால்
"கனவே என் காதலி "

காலம் கணக்கில்லை ..
பகலும் அவளுடன்..
இரவும் அவளுடன் ..
தெரியாதென்று நினைத்தேன் ..
அப்பா சொன்னார், ..
"பகல் கனவு காணாதே "
என் காதல் வீட்டிற்க்கும் தெரிந்ததுதான் ..
எதிர்ப்பில்லை ..
என் அப்பா நல்லவர் ..!
அம்மாவும் கூட..!

"கனவே என் காதலி "
கலையாத கனவு 
கட்டி பின்னிய 
பெண்கள் சடை  போல ..
"அழகு அவள் " !
வர்ணங்கள் கொண்டவள் ..
என்னை புரிந்தவள் ..
புரிந்தவளிடம் ..
உன்னை தொலைத்து ..
தொலைந்த பின்  தேடு..
கனவில் தொலைந்தேன் ..
தேடினேன் ..

கனவே என் காதலி ..
கதை கத்தை கத்தையாய்..
கவிதைகள் காதலுடன்..
கதையாய் கவிதை கத்தை கத்தையாய் ..
எல்லாம் எழுதலாம்..
என் அவள் பற்றி ..
கனவே என் காதலி ..
"என் காதலே கனவு .."

No comments:

Post a Comment