Thursday, November 12, 2009

! இந்த வாரம் கொஞ்சம் கிறுக்கலாம் என்று சிந்தித்தபோது என் மதியில் உதித்தது...மழை, மேகம், பூமி வெப்பமயமாதல் ..எல்லாம் இணைத்திருக்கிறேன் ஓர் கவிதையில் !


பெண்மேகம் அழுதாள்....
மனமுருகி...
நம் மக்கள் நிலைகண்டு
மழைத்துளியாய்.....
துடைத்தாள் பலர் கண்ணீரை....
தன் விழி மழை நீரால்....
என் அன்பு பெண் மேகம்...

நன்றி மறப்பது மனிதர் இயல்பு என
வெகு தெளிவாய் எடுத்துரைக்க...
எங்கள் கண்ணீர் துடைத்த...
கொடைப் பெருந்தேவியே...
உன்னை உருக்குலைக்க...
கரியமில வாயு என்றரக்கனை...
ஏவிவிட்டோம்...
உன் கோபக் கனலில் சிக்கிவிட்டோம்...



உன் விழி மழை நீராலேயே...
எங்களை தண்டிக்க என்னிவிட்டயோ...
வீசுகிறாய் பெரும்புயலாய்
என் தமிழ்நாட்டில்....
உன் கோபம் தாங்க
சக்தி இல்லை எம்மவர்க்கு...
மடிகிறார் உந்தன்
கோபக் கொலைப் பார்வையில்....
யாம் செய்த தவறு மறந்து...
தாயே உந்தன் கொலை பார்வை நீக்கி..
உந்தன் கொடைப் பார்வை வேண்டுகிறேன்...
நல்குவாயாக...

-நான் தமிழன்

3 comments:

  1. நான் தமிழனுக்கு,
    கவிதையும் ,நீ உருவாக்கிய படமும் மிக அருமையாக இருக்கிறது.நந்தினி.

    ReplyDelete
  2. அடுத்த கவிதைத் துளிகள் என்று சிதறுமோ? விரைவில் எதிர்பார்க்கின்றேன். நந்தினி.

    ReplyDelete