என் தனிமையின் அவதாரங்கள்
"தனிமை - கசப்பு "
தனிமை கிடைத்தும்
உன்னோடு ஓர் வார்த்தை பேசாது
நான் ஊமை யாகி போன அச்சமயம்
கசந்தது தனிமை
"தனிமை-கசப்பு"
"தனிமை-இனிமை "
வெகுதொலைவு உன்னைவிட்டு
நான் வந்துவிட
இங்கேயும் அதே "தனிமை" கிடைக்கிறது
உன் நிழற்படத்துடன்...
நிறுத்தாது பேசுகிறேன்...
இனிக்கிறது தனிமை
"தனிமை -இனிமை"
"தனிமை -கொடுமை "
வெற்றறையில் உட்க்கார்ந்து
வாய் மணக்க அழகு தமிழ்
பேச ஆளின்றி
என் குடும்பத்தின் நினைப்பு தொற்றி..
வழியும் விழி நீர் துடைக்கிறேன்..
கொடுமை செய்கிறது தனிமை..
"தனிமை - கொடுமை "
"தனிமை - என் ஆசான் "
வாரம் ஓர் முறையாவது
என்னைக் கிறுக்க வைக்கிறார்..
உங்களை (என் கவிதைகளை வாசிப்போர் ?)
சிரமத்திற்குள்ளாக்குவதில் என்ன மகிழ்ச்சியோ
என் தனிமைக்கு ஞானறியேன்...!!
என் தனிமை தசாவதாரம்
எடுக்க இன்னும் சில காலம் எடுக்கும்
என நினைக்கிறேன்...
-நான் தமிழன்
நண்பா,
ReplyDeleteநலம்.நீயும் உன் குடும்பத்தாரும் நலமாக இருப்பீர்கள்
என நினைக்கின்றேன்.
உன் கவிதை என்னை உருக்கிவிட்டது.
தனிமையில் நிழற்படம் முன்னிறுத்தாது பேசுவதை
நான் இங்கிருந்தே ரசித்துக் கொண்டிருக்கிறேன்.இனி
நேரம் கிடைக்கும் போதெல்லாம் உனது கவிதைப் பக்கம் வருவேன். என்றும் அன்புடன் நந்தினி.
! மிக்க நன்றி நந்தினி !
ReplyDelete