Monday, September 13, 2010

தப்பு.. தப்பு.

தப்பு..
தப்பு..
பெண் ஆண் உரசி நடந்து..
படகருகில்..வந்து நின்று ..
அவள் மடியில் அவன் படுத்து ...
துப்பட்டா மூடி கிடக்க...
காதல்..
காதல்..
காதல்..
தப்பு..
தப்பு..
தலையிலடித்தேன் நான்..


தப்பு..
தப்பு..
மப்பும் மந்தாரமுமாக..
பப்பில்  பெண்கள்..
ஆண்கள்..வித்தியாசமின்றி..
நெளிந்து ஆட..
கட்டி அனைத்து..
தடவிக் கொடுத்துக்
காதல்..
காதல்..
காதல்..
ஒரு நாள்
ஓரிரவு காதல்..
தப்பு..
தப்பு..
தலையிலடித்தேன் நான்..!


தப்பு..
தப்பு..
தளும்ப ஆடை..
குலுங்கி சிரிக்கும் பெண்கள்..
அவன் கையில்  பொம்மையாய்
அவர்கள்..
பூங்கா பூத்திருந்தது..
தப்பு..
தப்பு..
தலையிலடித்தேன் நான்..
கலாசாரம்..கொள்கை பற்றி..
பாடம் எடுத்தேன்..
எனக்கே நான் !


நேற்றிரவு கனவில் வந்தாள்..
ஒருவள்..
தூக்கத்தில்
என்னை தூக்கி அனைத்து..
மடியில் கிடத்தினாள்..!
காதருகில் வந்து
மெதுவாக சொன்னாள்..
"!பொறாமை..உனக்கு..!"
உமிழ்ந்த வார்த்தை..
அமிலமென சுட்டெரிக்க
உண்மை விளங்கியது..
"எனக்கொரு கேர்ள்
பிரெண்ட் வேணுமடா..! "
வானொலி பாட..
என்னுள்ளே பட்டாம்பூச்சி..!

No comments:

Post a Comment