Thursday, August 26, 2010

! நான் தேடும் கனவு !

வாழ்க்கை வரலாறு ...

காதல் வேதியியல்..

நீ இயற்பியல்...என்பேன் ..

நாம் சேர்ந்தால்

அது உயிரியல் ஆகிடும்..

"எந்திரன்" தந்த அறிவியல் பித்து தணிக்க ...

என் அறிவு பித்துக் கொண்ட அறிவியற்கவிதை..



கண் கொண்டு

காற்றலையில் கதைத்து

கவர்ந்திழுப்பாய்..

எதிர் துருவம் என்னை..!

உன் கண்களும் காந்தங்களே..!



வளையும் உன் வளையில்..

அலையில் தொலையும் கரையாய்..

தொலையும் என் இதயம்..

காமம் என் காதலை புசிக்கும்..

சுதாரிப்பேன்..!

அவ்வப்போது என் இதயத்தில் நிலநடுக்கம்..

சுனாமியாய்..ஆர்மோன்களின் வெள்ளப்பெருக்கம்..

கொண்டு வருவாய்..

ஆசையில் எனை அடித்துச் செல்வாய் !


உடற்கூறு சாத்திரம் படித்த எனக்கு

உள்ளக்கூறு சாத்திரம் படிப்பித்தாய்..

நீ கண்ணிமைக்கும்

ஒவ்வொரு தருணமும்

என்னுள்ளே ஹிரோஷிமா..!

தெரியுமா?

இரவின் இருள் நீக்க

மின்னலே!

அவ்வப்போது நீ வருவாய்..

என் இரவை இனிப்பாக்க..

என் கனாவில் ..வருவாய் நீ..

என் கானா தேவதையே..

நீயும்

மின்னலே..!



ஐன்ஸ்டீனின் கனவில் நீ வரவில்லை..!

இல்லையேல் அவரும் சென்றிருப்பார் கவி எழுத...

அனுவைப் பிளந்திருக்கமாட்டர்..

ஹிரோஷிமா தப்பித்திருக்கும்..



என் மூளை நியுரான்களுக்கு

வேலை அதிகம்..தந்தாய்

தூக்கம் கெடுத்தாய்..!

கிறுக்கவைத்தாய்..!

அழவைத்தாய்..!

சிரிக்கவைத்தாய்..!

கனவில் வாழும் உனை..

நினைவில் கொண்டு..

நிஜத்தில் தேடுகிறேன்

கனவே உனை..!

தேவதையே உனை..!

No comments:

Post a Comment